Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2312 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2312மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – இவ்வோ இடங்களிலே நிற்கிறவன் தான் ஆஸ்ரித விரோதி நிரசனம் பண்ணுமவனுமாய் ஸூசீலனுமாய் இருப்பான் ஒருவன் கிடீர் என்கிறார் கீழ்ச் சொன்ன ஸ்ரீ திருப்பதிகள் நெஞ்சை அனுவர்த்திக்கிற படி – இவ்விவ இடங்களிலே வந்து நிற்கிறவன் ஆஸ்ரித விரோதிகளை போக்கி துர்மானிகளோடும் புறையறக் கலக்கும் ஸீலாவான் கிடீர் -என்கிறார் 31
இவையவன் கோயில் இரணியன தாகம்,
அவைசெய் தரியுருவ மானான், – செவிதெரியா
நாகத்தான் நால்வேதத் துள்ளான், நறவேற்றான்
பாகத்தான் பாற்கடலு ளான்.
இரணியனது, Iraniyanadhu - ஹிரண்யாஸுரனுடைய
ஆகம், Aagam - மார்பை
அவைசெய்து, Avaiseithu - இருபிஸவாக்க
அரி உருவம் ஆனான், Ari Uruvam Aanaan - நரசிங்கமாகத் தோன்றினவனும்
செவி தெரியா நாகத்தான், Sevi Theriyah Naagaththaan - கண்ணையே செவியாகவுடையனாகையாலே தனிப்பட செவி தெரியாமலிருக்கிற ஆதிசேஷனைப் படுக்கையாக வுடையவனும்
நால் வேதத்து உள்ளான், Naal Vedaththul Laan - நான்கு வேதங்களுக்கும் பொருளாயிருப்பனும்
நறவு என்றான் பாகத்தான், Naravu Endraan Paagaththaan - தேன்போன்ற கங்கையை ஏற்றுக் கொண்டவனான ருத்ரனைத் திருமேனியின் ஒரு பாகத்திலே உடையவனும்
பாற்கடலுளான், Paar Kadalulaan - திருப்பாற்கடலில் பள்ளி கொள்பவனுமான
அவன், Avan - அப்பெருமானுடைய
கோயில் இவை, Koil Ivai - கோயில் கீழ்ப்பாட்டில் சொன்ன திருப்பதிகளாம்.