Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2313 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2313மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – இப்படி சீலவானான இவன் எழுந்து அருளி இருக்கும் இடங்களுக்கு ஓர் எல்லை இல்லை கிடீர் –என்கிறார் – இப்படி சீலவானான அவன் எழுந்து அருளி இருக்கும் இடங்களுக்கு ஓர் எல்லை இல்லை -என்கிறார் 32
பாற்கடலும் வேங்கடமும் பாம்பும் பனிவிசும்பும்,
நூற்கடலும் நுண்ணுல தாமரைமேல், – பாற்பட்
டிருந்தார் மனமும் இடமாகக் கொண்டான்,
குருந்தொசித்த கோபா லகன்.
குருந்து, Kurundhu - குருந்த மாத்தை
ஒசித்த, Osiththa - முறித்தொழித்த
கோபாலகன், Kopalagan - கண்ணபிரான்
பால் கடலும், Paal Kadalum - திருப்பாற் கடலையும்
பாம்பும், Paambum - திருவனந்தாழ்வானையும்
பனி விசும்பும், Pani Visumbum - (ஸம்ஸாராதாபங்கள் தட்டாமல்) குளிர்ந்திருக்கிற பரமபதத்தையும்
நூல் கடலும், Nool Kadalum - கடல்போன்ற சாஸ்த்ரங்களையும்
துண் நூல தாமரை மேல்பால்பட்டிருந்தார் மனமும், Thun Nool Thaamarai Melpaalpatthirundhaar Manamum - ஸூக்ஷமமான சாஸ்த்ரங்களால் பிரதிபாதிக்கப்பட்ட ஹ்ருதய கமலத்திலே கரணங்களெல்லாம் ஊன்றியிருக்கும்படி யோகத்தில் நிலைநின்ற யோகிகளினுடைய நெஞ்சையும்
இடம் ஆக கொண்டான், Idam Aaga Kondonaan - வாஸஸ்தானமாகக் கொண்டிருக்கிறான்.