| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2313 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – இப்படி சீலவானான இவன் எழுந்து அருளி இருக்கும் இடங்களுக்கு ஓர் எல்லை இல்லை கிடீர் –என்கிறார் – இப்படி சீலவானான அவன் எழுந்து அருளி இருக்கும் இடங்களுக்கு ஓர் எல்லை இல்லை -என்கிறார் 32 | பாற்கடலும் வேங்கடமும் பாம்பும் பனிவிசும்பும், நூற்கடலும் நுண்ணுல தாமரைமேல், – பாற்பட் டிருந்தார் மனமும் இடமாகக் கொண்டான், குருந்தொசித்த கோபா லகன். | குருந்து, Kurundhu - குருந்த மாத்தை ஒசித்த, Osiththa - முறித்தொழித்த கோபாலகன், Kopalagan - கண்ணபிரான் பால் கடலும், Paal Kadalum - திருப்பாற் கடலையும் பாம்பும், Paambum - திருவனந்தாழ்வானையும் பனி விசும்பும், Pani Visumbum - (ஸம்ஸாராதாபங்கள் தட்டாமல்) குளிர்ந்திருக்கிற பரமபதத்தையும் நூல் கடலும், Nool Kadalum - கடல்போன்ற சாஸ்த்ரங்களையும் துண் நூல தாமரை மேல்பால்பட்டிருந்தார் மனமும், Thun Nool Thaamarai Melpaalpatthirundhaar Manamum - ஸூக்ஷமமான சாஸ்த்ரங்களால் பிரதிபாதிக்கப்பட்ட ஹ்ருதய கமலத்திலே கரணங்களெல்லாம் ஊன்றியிருக்கும்படி யோகத்தில் நிலைநின்ற யோகிகளினுடைய நெஞ்சையும் இடம் ஆக கொண்டான், Idam Aaga Kondonaan - வாஸஸ்தானமாகக் கொண்டிருக்கிறான். |