| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2314 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – இப்படி இருக்கிறவன் அபேஷித்தார் அபேஷித்தது எல்லாம் கொடுக்குமவன் கிடீர் என்கிறார் – இவனுடைய உடைமை எல்லாம் பரார்த்தம் என்கிறது – இப்படி இருக்கிறவன் அபேக்ஷித்தார் அபேக்ஷித்தத்தை எல்லாம் கொடுக்குமவன் கிடீர் என்கிறார் – 33 | பாலனாய் ஆலிலைமேல் பைய, உலகெல்லாம் மேலொருநா ளுண்டவனே மெய்ம்மையே, – மாலவ மந்திரத்தால் மாநீர்க் கடல்கடைந்து, வானமுதம் அந்தரத்தார்க் கீந்தாய்நீ அன்று. | மேல் ஒரு நாள், Mel Oru Naal - முன்னொரு காலத்தில் பாலகன் ஆய், Palagan Aay - சிறு குழந்தை வடிவமுடையனாகி ஆல் இலை மேல், Aal Ilai Mel - ஆலந்தளிரிலே உலகு எல்லாம், Ulaku Ellam - உலகங்களையெல்லா பைய, Paiya - மெல்ல மெய்ம்மெயே, Meimmaiye - உண்மையாகவே உண்டவனே, Undavaney - அமுதுசெய்து கிடந்தவனே! மாலவனே, Malavaney - ஸர்வாதிகளே! நீ, Nee - இப்படிப்பட்ட நீ, அன்று, Andru - அன்றொருநாள் மந்தரத்தால், Mandharaththal - மந்தரமலையைக்கொண்டு மா நீர கடல் கடைந்து, Maa Neera Kadal Kadaindhu - மிக்க நீரையுடைய கடலைக் கடைந்து வான் அமுதம், Vaan Amudham - திவ்யமான அமிருதத்தை அந்தரத்தார்க்கு, Andharaththarkku - தேவர்களுக்கு ஈந்தாய், Eendhai - அளித்தாய். |