| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2317 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – யாம் தொழுதும் என்றாரே –மநோ ரதித்த படியே அனுபவிக்கிறார் – யாம் தொழுதும் என்று மநோ ரதித்த படியே அனுபவிக்கிறார் – 36 | கைய கனலாழி கார்க்கடல்வாய் வெண்சங்கம், வெய்ய கதைசார்ங்கம் வெஞ்சுடர்வாள், செய்ய படைபரவ பாழி பனி நீ ருலகம், அடியளந்த மாயன் அவற்கு. | பனி நீர் உலகம், Pani Neer Ulagam - குளிர்ந்த நீரையுடைய கடல்சூழ்ந்த உலகங்களை அடி, Adi - தனது திருவடியினாலே அளந்த, Alandha - அளந்துகொண்ட மாயர் அவர்க்கு, Maayar Avarkku - ஆச்சரியச் செய்கையை யுடையரான அப்பெருமாளுக்கு கனல் ஆழி, Kanal Aazhi - திக்ஷ்ணமான சக்கரமும் கார் கடல் வாய் வெண் சங்கம், Kaar Kadal Vaai Ven Sangam - கருங்கடலில் தோன்றின வெளுத்த சங்கும் வெண்ண, Venn - வெவ்விதான கதை, Kathai - கதையும் சார்ங்கம், Saarnggam - சார்ங்கமும் வெம் சுடர்வாள், Vem Sudarvaal - வெவ்விய சுடரையுடைய நந்தகவாளும் ஆகிய செய்ய படை, Seyya Padai - அழகிய இவ்வாயுதங்கள் கைய, Kaiya - திருக்கையிலுள்ள, பரவை, Paravai - கடலானது பாழி, Paazhi - படுக்கையாயிருக்கின்றது. |