Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2318 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2318மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – இப்படிப் பட்டவன் திருவடிகளிலே நான் ஒரு வழியாலே அடிமை புக்கேன் இங்கனே இருந்துள்ள நான் அவனை ஸ்ப்ருஹநீயனாக புத்தி பண்ணுகை அன்றிக்கே அவன் தானே என்னை ஸ்ப்ருஹநீயனாக புத்தி பண்ணா நின்றான் என்கிறார் – நாம் அடிமையில் அந்வயிக்க ஸுபரியைப் போலே அநேகம் வடிவு கொண்டு புஜிக்க ஆசைப்படா நின்றான் -என்கிறது – இப்படி தாம் அவனை அனுபவிக்கப் புக்கவாறே அவனும் தன் பெருமையைப் பாராமல் தம் பக்கலிலே அத்யபி நிவிஷ்டனாய்க் கொண்டு பல வடிவு கொண்டு தம்மை அனுபவியா நின்றான் என்கிறார் – 37
அவற்கடிமைப் பட்டேன் அகத்தான் புறத்தான்,
உவக்கும் கருங்கடல்நீ ருள்ளான், துவர்க்கும்
பவளவாய்ப் பூமகளும் பன்மணிப்பூ ணாரம்,
திகழும் திருமார்வன் தான்.
உவர்க்கும் கரு கடல் நீர் உள்ளான், Uvarkkum Karu Kadal Neer Ullaan - உப்புக்கரிக்கின்ற கரிய கடல்நீரிலுமுள்ளவனாய்
துவர்க்கும் பவளம் வாய் பூ மகளும், Thuvarkkum Pavalam Vaai Poo Magalum - சிவந்த பவளம் போன்ற வாயை யுடையளான பிராட்டியும்
பல் மணி பூண், Pal Mani Poon - பலவகையான ரத்னங்களழுத்தின திருவாபரணங்களும்
ஆரம், Aaram - ஹாரங்களும்
திகழும், Thigazhum - விளங்கப்பெற்ற
திருமார்வன் தான், Thirumaarvan Thaan - திருமார்பையுடையனான எம்பிரான்
அகத்தான் புறத்தான், Agaththaan Puraththaan - உள்ளிலும் வெளியிலும் வாசியறக் கலந்திருக்கின்றான்.
அவற்கு, Avarukku - அப்படிப்பட்ட பெருமானுக்கு
அடிமை பட்டேன், Adimai Patten - ஆட்பட்டவனானேன்.