Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2319 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2319மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – இப்படி என்னை வந்து விரும்பினவன் தான் சால எளியான் ஒருவனோ-ஸ்ரீ சர்வேஸ்வரன் கிடீர் என்கிறார் – இப்படி என்னை மேல் விழுந்து விரும்புகிறவன் ஒரு கா புருஷன் அல்லன் -ஸ்ரீ சர்வேஸ்வரன் கிடீர் -என்கிறார் – 38
தானே தனக்குவமன் தன்னுருவே எவ்வுருவும்,
தானே தவவுருவும் தாரகையும், – தானே
எரிசுடரும் மால்வரையும் எண்டிசையும், அண்டத்
திருசுடரு மாய இறை.
எவ் உருவும், Ev Uruvum - எல்லாப் பொருள்களும்
தன் உருவே, Than Uruve - அவன்றனக்கு சரீரமாகவேயிருக்கும்,
தவம் உருவும், Thavam Uruvum - தபஸ்ஸுபண்ணிப் புண்யசரீரமுடையராயிருக்கிற பிரமன் முதலானவர்களும்
தாரகையும், Thaarakaiyum - நக்ஷத்ரங்களும்
தானே, Thaaney - அவன்றன் வடிவாகவேயிருக்கும்,
எரி சுடரும், Eri Sudarum - ஜ்வலிக்கின்ற அக்நியும்
மால் வரையும், Maal Varaiyum - பெரிய குலபர்வதங்களும்
எண் திசையும், En Thisaikum - எட்டு திக்குகளும்
அண்டத்து, Andathu - மேலுலகிலுள்ள
இரு சுடரும், Iru Sudarum - சந்த்ரஸூர்யர்களும்
தானே ஆய இறை, Thane Aaya Irai - தனக்கு ப்ரகாரமாயிருக்கப்பெற்ற எம்பெருமான்
தனக்கு தானே உவமன், Thanakku Thane Uvaman - (ஒப்பற்றனாகையாலே) தனக்குத் தானே உபமானமாயிருப்பவன்.