| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2319 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – இப்படி என்னை வந்து விரும்பினவன் தான் சால எளியான் ஒருவனோ-ஸ்ரீ சர்வேஸ்வரன் கிடீர் என்கிறார் – இப்படி என்னை மேல் விழுந்து விரும்புகிறவன் ஒரு கா புருஷன் அல்லன் -ஸ்ரீ சர்வேஸ்வரன் கிடீர் -என்கிறார் – 38 | தானே தனக்குவமன் தன்னுருவே எவ்வுருவும், தானே தவவுருவும் தாரகையும், – தானே எரிசுடரும் மால்வரையும் எண்டிசையும், அண்டத் திருசுடரு மாய இறை. | எவ் உருவும், Ev Uruvum - எல்லாப் பொருள்களும் தன் உருவே, Than Uruve - அவன்றனக்கு சரீரமாகவேயிருக்கும், தவம் உருவும், Thavam Uruvum - தபஸ்ஸுபண்ணிப் புண்யசரீரமுடையராயிருக்கிற பிரமன் முதலானவர்களும் தாரகையும், Thaarakaiyum - நக்ஷத்ரங்களும் தானே, Thaaney - அவன்றன் வடிவாகவேயிருக்கும், எரி சுடரும், Eri Sudarum - ஜ்வலிக்கின்ற அக்நியும் மால் வரையும், Maal Varaiyum - பெரிய குலபர்வதங்களும் எண் திசையும், En Thisaikum - எட்டு திக்குகளும் அண்டத்து, Andathu - மேலுலகிலுள்ள இரு சுடரும், Iru Sudarum - சந்த்ரஸூர்யர்களும் தானே ஆய இறை, Thane Aaya Irai - தனக்கு ப்ரகாரமாயிருக்கப்பெற்ற எம்பெருமான் தனக்கு தானே உவமன், Thanakku Thane Uvaman - (ஒப்பற்றனாகையாலே) தனக்குத் தானே உபமானமாயிருப்பவன். |