Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2320 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2320மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – இப்படி ஜகதாகாரனான ஸ்ரீ சர்வேஸ்வரன் ஸ்ரீ திரு மலையிலே புகுந்து சந்நிஹிதனாய்ப் பின்பு என் ஹிருதயத்தை விட்டுப் போகிறிலன் என்கிறார் – இப்படி ஜெகதாகாரனாய் நின்ற ஸ்ரீ சர்வேஸ்வரன் ஸ்ரீ திருமலையிலே வந்து சந்நிஹிதனாய்- பின்பு எண் ஹிருதயத்தை விட்டுப் போகிறிலன் -என்கிறார் – 39
இறையாய் நிலனாகி எண்டிசையும் தானாய்,
மறையாய் மறைப்பொருளாய் வானாய் – பிறைவாய்ந்த
வெள்ளத் தருவி விளங்கொலிநீர் வேங்கடத்தான்,
உள்ளத்தி னுள்ளே உளன்.
இறை ஆய், Irai Aay - ஸர்வஸ்வாமியாய்
நிலன் ஆகி, Nilan Aagi - பூமிக்கு அந்தர்யாமியாய்
எண் திசையும் தான் ஆய், En Thisaiyum Thaan Aay - எட்டு திக்குக்களிலுமுண்டான ஸகல வஸ்துக்களையும் தனக்கு ப்ரகாரமாகவுடையனாய்
மறை அய், Marai Aiy - வேதங்களுக்கு ப்ரவர்த்தகனாய்
மறைபொருள் ஆய், Maraiporul Aay - அந்த வேதங்களின் பொருளாயிருப்பவனாய்
வான் ஆய், Vaan Aay - நித்ய விபூதி நிர்வாஹகனாய்
பிறை வாய்ந்த, Pirai Vaayndha - சந்திரபதத்தைக் கிட்டியிருப்பதும்
வெள்ளம் அருவி, Vellam Aruvi - மிக்க ஜலத்தையுடைய அருவிகளினுடைய
விளங்கு ஒலி, Vilangu Oli - விளங்குகின்ற கோஷத்தையுடைத்தான்
நீர், Neer - நீரையுடையதுமான
வேங்கடத்தான், Vengadaththaan - திருவேங்கட மாலையில் வாழ்பவனான எம்பெருமான்
உள்ளத்தின் உள்ளே உளன், Ullaththin Ullae Ulan - என்னெஞ்சினுள்ளே இருக்கின்றான்