| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2321 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – இப்படி சர்வாதிகனான ஸ்ரீ சர்வேஸ்வரன் என் பக்கலிலே வந்து புகுந்த பின்பு நெஞ்சே இனி நமக்கு ஒரு குறைகளும் இல்லை கிடாய் என்கிறார் – இப்படி சர்வாதிகனானவன் என் பக்கலிலே வந்து புகுந்த பின்பு நெஞ்சே நமக்கு இனி ஒரு குறைகளும் இல்லை -கிடாய் என்கிறார் – 40 | உளன்கண்டாய் நன்னெஞ்சே. உத்தம னென்றும் உளன்கண்டாய், உள்ளுவா ருள்ளத் துளன்கண்டாய், விண்ணெடுங்கக் கோடுயரும் வீங் கருவி வேங்கடத்தான், மண்ணெடுங்கத் தானளந்த மன். | நல் நெஞ்சே, Nal Nenjee - எனக்குப் பாங்கான மனமே! விண் ஒடுங்க, Vin Odunga - மேலுலகங்களெல்லாம் ஒரு முலையில் ஒதங்கும்படி கோடு, Kodu - சிகரங்கள் உயரும், Uyarium - உயர்ந்தோங்கி யிருக்கப்பெற்றதும் வீங்கு அருவி, Veengu Aruvi - நிறைந்த அருவிகளையுடையதுமான வேங்கடத் தான், Venkatat Than - திருமலையில் எழுந்தருளியிருப்பவனும் மண், Man - பூமிப் பரப்பெல்லாம் ஒடுங்க, Odunga - (திருவடியின் ஒரு பாகத்திலே) ஒருங்கிப் போம்படி தான் அளந்த, Thaan Alandha - தான் அளந்து கொண்டவனுமான மன், Man - ஸ்வாமியானவன் உளன் கண்டாய், Ulan Kandaai - (நம்மை ரக்ஷிப்பதனாலே) ஸத்தை பெற்றிருப்பவன் காண், உத்தமன், Uththaman - புருஷோத்தமனான அப்பெருமான் என்றும் உளன் கண்டாய், Endrum Ulan Kandaai - எக்காலத்திலும் (நம்மை ரக்ஷிப்பதிலே தீக்ஷைகொண்டு) இருக்கிறான்காண், உள்ளுவார் உள்ளத்து, Ulluvaar Ullaththu - ஆஸ்திகர்களுடைய மனத்திலே உளன் கண்டாய், Ulan Kandaai - நித்யவாஸம் பண்ணுமவன்காண் |