| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2322 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – திரு வுலகு அளந்து அருளின இடம் ப்ராப்தமாய்த் திரியட்டும் அவ்விடம் தன்னிலே அந்த அபதானத்தைப் பேசி அனுபவிக்கிறார் – மண் ஒடுங்கத் தான் அளந்த என்று ப்ரஸ்துதமான திரு உலகு அளந்து அருளின திவ்ய சேஷ்டிதத்திலே மீளவும் திரு உள்ளம் சென்று -அந்த அபதானத்தைப் பேசி அனுபவிக்கிறார் – 41 | மன்னு மணிமுடிநீண் டண்டம்போய் எண்டிசையும், துன்னு பொழிலனைத்தும் சூழ்கழலே, – மின்னை உடையாகக் கொண்டன் றுலகளந்தான்,குன்றும் குடையாக ஆகாத்த கோ. | குன்றம் குடை ஆக, Kuntram Kudai Aaga - கோவர்த்தன மலையைக் குடையாகக் கொண்டு ஆகாத்த கோ, Aagatha Ko - பசுக்களைக் காப்பாற்றின ஸ்வாமியானவன், அன்று, Andru - முன்பொருகாலத்தில், மன்னு மணி முடி, Mannu Mani Mudi - பொருந்தின ரத்னங்களையுடைய கிரீடம்! நீண்டு, Neendu - ஓங்கி வளர்ந்து அண்டம் போய், Andam Poi - அண்ட பித்தையைச் சென்றுகிட்ட, எண் திசையும், En Thisaikum - எட்டு திக்குக்களையும் துன்னு பொழியில் அனைத்தும், Thunnu Pozhiyil Anaiththum - (பிராணிகள்) நெருங்கிக் கிடக்கிற பூமண்டலம் முழுவதையும் சூழ், Sool - வியாபித்த கழலே, Kazhale - திருவடியினாலேயே மின்னை உடை ஆக கொண்டு உலகு அளந்தான், Minnai Udai Aaga Kondu Ulaku Alandhaan - மின்னலைப் பீதாம்பரமாக அணிந்துக்கொண்டு உலகங்களை யளந்தான். |