| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2325 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – நெஞ்சே உபய விபூதி யுக்தனான ஸ்ரீ சர்வேஸ்வரன் திருவடிகளை ஆச்ரயிக்கப் பார் என்கிறார் – நெஞ்சே -உபய விபூதி உக்தனான ஸ்ரீ சர்வேஸ்வரன் திருவடிகளை ஆஸ்ரயிக்கப் பார் என்கிறார் – 44 | உலகமும் ஊழியும் ஆழியும், ஒண்கேழ் அலர்கதிரும் செந்தீயு மாவான், பலகதிர்கள் பாரித்த பைம்பொன் முடியான் அடியிணைக்கே, பூரித்தென் நெஞ்சே புரி. | என் நெஞ்சே, En Nenchae - எனது மனமே! உலகமும், Ulagamum - உலகங்களும் ஊழியும், Oozhiyum - ஸம்ஹாரகாலமும் ஆழியும், Aazhiym - கடல்களும் ஒண் கேழ் அவர் கதிரும், On Kezh Avan Kathirum - அழகிய நிறத்தையும் பரம்பின கிரணங்களையுமுடைய சந்திர ஸூர்கயர்களும் செம் தீயும், Sem Theeyum - சிவந்த நிறத்தை யுடைத்தான் அக்நியும் ஆவான், Aavaan - ஆகிய இப்பொருள்களெல்லாம் தனக்கு ப்ரகாரமாம்படி நிற்பவனும், பல கதிர்கள் பாரித்த, Pala Kathirgal Paariththa - பல கிரணங்களைப் புறப்பட விடுகின்ற பை பொன் முடியான், Pai Pon Mudhiyaan - அழகிய பொன்முடியை யுடையவனுமான எம்பெருமானுடைய அடி இணைக்கே, Adi Inaikkai - உபயபாதங்களக்கே பூரித்து புரி, Pooriththu Puri - பரிபூரணமாக விருப்பங்கொள்ளு. |