திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2327 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – ஸ்ரீ திருமலையிலே வந்து சந்நிஹிதன் ஆனவன் பிரயோஜனாந்தர பரர் உடைய அபேஷிதமும் செய்து தலைக் கட்டுமவன் கிடீர் என்கிறார் – ஸ்ரீ திருமலையிலே வந்து சந்நிஹிதனானவன்-ப்ரயோஜனாந்தர பரர்க்கும் அபேக்ஷித சம்விதானம் பண்ணுமவன் கிடீர் -என்கிறார் – 46 | மலைமுகடு மேல்வைத்து வாசுகியைச் சுற்றி,
தலைமுகடு தானொருகை பற்றி, அலைமுகட்
டண்டம்போய் நீர்தெறிப்ப அன்று கடல்கடைந்தான்,
பிண்டமாய் நின்ற பிரன். | பதவுரை Show / Hideபிண்டம் ஆய் நின்ற பிரான், Pindham Aayi Nindra Piraan - (ஜகத்துக்கு) மூலகாரணமாக நின்ற எம்பெருமான், அன்று, Andru - முன்பொருகாலத்தில், முகடு மலை, Mugadu Malai - சிகரத்தையுடைத்தான மந்தரமலையை மேல் வைத்து, Mel Vaiththu - (கூர்மரூபியான தன்னுடைய முதுகின்மேலே) வைத்து வாசுகியை சுற்றி, Vaasugiyai Sutrri - (அதிலே) வாஸுகிநாகத்தைக் கடைகயிறாக)ச் சுற்றி தலை முகடு, Thalai Mugadu - அதன் தலைப்பாகத்தை தான் ஒரு கைபற்றி, Thaan Oru Kaipatri - தான் ஒரு கையாலே பற்றிக்கொண்டு அலைநீர், Alainir - அலையின் திவலைகள் அண்டம் முகடு போய் தெறிப்ப, Andam Mukadu Poi Therippa - அண்டத்தின் மேற்சென்று தெறிக்கும்படியாக கடல் கடைந்தான், Kadal Kadaindhan - கடலைக்கடைந்தான். |