Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2327 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2327மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – ஸ்ரீ திருமலையிலே வந்து சந்நிஹிதன் ஆனவன் பிரயோஜனாந்தர பரர் உடைய அபேஷிதமும் செய்து தலைக் கட்டுமவன் கிடீர் என்கிறார் – ஸ்ரீ திருமலையிலே வந்து சந்நிஹிதனானவன்-ப்ரயோஜனாந்தர பரர்க்கும் அபேக்ஷித சம்விதானம் பண்ணுமவன் கிடீர் -என்கிறார் – 46
மலைமுகடு மேல்வைத்து வாசுகியைச் சுற்றி,
தலைமுகடு தானொருகை பற்றி, அலைமுகட்
டண்டம்போய் நீர்தெறிப்ப அன்று கடல்கடைந்தான்,
பிண்டமாய் நின்ற பிரன்.
பிண்டம் ஆய் நின்ற பிரான், Pindham Aayi Nindra Piraan - (ஜகத்துக்கு) மூலகாரணமாக நின்ற எம்பெருமான்,
அன்று, Andru - முன்பொருகாலத்தில்,
முகடு மலை, Mugadu Malai - சிகரத்தையுடைத்தான மந்தரமலையை
மேல் வைத்து, Mel Vaiththu - (கூர்மரூபியான தன்னுடைய முதுகின்மேலே) வைத்து
வாசுகியை சுற்றி, Vaasugiyai Sutrri - (அதிலே) வாஸுகிநாகத்தைக் கடைகயிறாக)ச் சுற்றி
தலை முகடு, Thalai Mugadu - அதன் தலைப்பாகத்தை
தான் ஒரு கைபற்றி, Thaan Oru Kaipatri - தான் ஒரு கையாலே பற்றிக்கொண்டு
அலைநீர், Alainir - அலையின் திவலைகள்
அண்டம் முகடு போய் தெறிப்ப, Andam Mukadu Poi Therippa - அண்டத்தின் மேற்சென்று தெறிக்கும்படியாக
கடல் கடைந்தான், Kadal Kadaindhan - கடலைக்கடைந்தான்.