| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2328 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – தேவர்கள் உடைய அபேஷிதம் செய்யுமவன் கிடீர் நம்முடைய விரோதிகளைப் போக்கி நம்மை அடிமை கொள்ளுவான் என்கிறார் – தேவர்களுடைய அபேக்ஷிதம் செய்தவனே கிடீர் நம் விரோதிகளைப் போக்கி அடிமை கொள்ளுவான் -என்கிறார் – 47 | நின்ற பெருமானே நீரேற்று, உலகெல்லாம் சென்ற பெருமானே செங்கண்ணா, – அன்று துரகவாய் கீண்ட துழாய்முடியாய், நாங்கள் நரகவாய் கீண்டாயும் நீ. | நீர் ஏற்று நின்ற பெருமானே, Neer Aetru Nindra Perumane - (மாவலிபக்கல்) உதகதானம் வாங்கிக்கொண்டு நின்ற பெருமானே! உலகு எல்லாம் சென்ற பெருமானை, Ulaku Ellam Senra Perumai - எல்லா வுலகங்களையும் வியாபித்த பெருமானே! செம் கண்ணா, Sem Kannaa - செந்தாமரைக்கண்ணனே! அன்று, Andru - முன்பொரு காலத்தில் துரகம், Duragam - குதிரைவடிவுகொண்டு நலியவந்த கேசினென்னுமசுரனுடைய வாய், Vaai - வாயை கீண்ட, Keenda - கீண்டொழித்தவனே! துழாய் முடியாய், Thuzhai Mudiyai - திருத்துழாயணிந்த திருமுடியை யுடையவனே! நங்கள், Nangal - எங்களுடைய நரகம் வாய், Naragam Vaai - நரகமார்க்கத்தை கீண்டாயும் நீ, Keendayum Nee - அழித்தவனும் நீயேயன்றோ? |