| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2329 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – நீர் சொல்லுகிறவை எல்லாம் நாம் அறிகிறிலோமீ-என்ன பின்னை இவை எல்லாம் செய்தார் ஆர் என்கிறார் – நீர் சொல்லுகிறவை எல்லாம் நாம் அறிகிறிலோமீ என்ன -பின்னை இவை எல்லாம் செய்தார் ஆர் என்கிறார் – 48 | நீயன்றே நீரேற் றுலகம் அடியளந்தாய், நீயன்றே நின்று நிரைமேய்த்தாய் – நீயன்றே மாவா யுரம்பிளந்து மாமருதி னூடுபோய், தேவா சுரம்பொருதாய் செற்று? | நீர் ஏற்று, Neer Aetru - (மாவலிபக்கல்) உதகதானம் வாங்கி உலகம், Ulagam - உலகங்களை அடி அளந்தாய் நீ அன்றே, Adi Alandhai Nee Andrae - திருவடியாலளந்தவன் நீயன்றோ? நின்று, Ninru - ரக்ஷிப்பதில் நிலைத்து நின்று பசுக்கூட்டங்களை மேய்த்தாய நீ அன்றே, Meyththay Nee Andrae - மேய்த்தவனும் நீயன்றோ? மா, Maa - குதிரைவடிவு கொண்டு வந்த கேசியென்னு மசுரனுடைய வாய் உரம், Vaai Uram - வாயின் வலிமையை பிளந்து, Pilandu - ஒழித்தவனும் மா மருதின் ஊடுபோய், Maa Maruthin Oodupoi - பெரிய இரட்டை மருத மாங்கனினிடையே தவழ்ந்து அவற்றை முறித்துத் தள்ளினவனும் தேவாசுரம், Devaasuram - தேவரஸுர யுத்தத்திலே செற்று, Settru - (அசுரர்கள்) அழியச்செய்து பொருதாய் நீ அன்றே, Porudhai Nee Andrae - போர் செய்தவனும் நீயன்றோ? |