Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2329 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2329மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – நீர் சொல்லுகிறவை எல்லாம் நாம் அறிகிறிலோமீ-என்ன பின்னை இவை எல்லாம் செய்தார் ஆர் என்கிறார் – நீர் சொல்லுகிறவை எல்லாம் நாம் அறிகிறிலோமீ என்ன -பின்னை இவை எல்லாம் செய்தார் ஆர் என்கிறார் – 48
நீயன்றே நீரேற் றுலகம் அடியளந்தாய்,
நீயன்றே நின்று நிரைமேய்த்தாய் – நீயன்றே
மாவா யுரம்பிளந்து மாமருதி னூடுபோய்,
தேவா சுரம்பொருதாய் செற்று?
நீர் ஏற்று, Neer Aetru - (மாவலிபக்கல்) உதகதானம் வாங்கி
உலகம், Ulagam - உலகங்களை
அடி அளந்தாய் நீ அன்றே, Adi Alandhai Nee Andrae - திருவடியாலளந்தவன் நீயன்றோ?
நின்று, Ninru - ரக்ஷிப்பதில் நிலைத்து நின்று பசுக்கூட்டங்களை
மேய்த்தாய நீ அன்றே, Meyththay Nee Andrae - மேய்த்தவனும் நீயன்றோ?
மா, Maa - குதிரைவடிவு கொண்டு வந்த கேசியென்னு மசுரனுடைய
வாய் உரம், Vaai Uram - வாயின் வலிமையை
பிளந்து, Pilandu - ஒழித்தவனும்
மா மருதின் ஊடுபோய், Maa Maruthin Oodupoi - பெரிய இரட்டை மருத மாங்கனினிடையே தவழ்ந்து அவற்றை முறித்துத் தள்ளினவனும்
தேவாசுரம், Devaasuram - தேவரஸுர யுத்தத்திலே
செற்று, Settru - (அசுரர்கள்) அழியச்செய்து
பொருதாய் நீ அன்றே, Porudhai Nee Andrae - போர் செய்தவனும் நீயன்றோ?