திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2 · அடைவு

and/or and/or Clear

Search Results for: 233 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
233பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-முதல்திருமொழி - தன்னேராயிரம்) (யசோதைப்பிராட்டி கண்ணனது அதிமாநுஷ சேஷ்டிதங்களைக் கண்டு முலைகொடுக்க அஞ்சுதல்) 11
காரார் மேனி நிறத் தெம்பிரானைக் கடி கமழ் பூங்குழலாய்ச்சி ஆரா இன்னமு துண்ணத் தருவன் நான் அம்மம் தாரேனென்ற மாற்றம் பாரார் தொல் புகழான் புதுவை மன்னன் பட்டர் பிரான் சொன்ன பாடல் ஏராரின்னிசை மாலை வல்லார் இருடீகேச னடியாரே–3-1-11
பதவுரை Show / Hide
கார் ஆர்,Kaar Aar - மேகத்தோடு ஒத்த
மேனி நிறத்து,Meni Nirathu - திருமேனி நிறத்தை யுடைய
எம் பிரானை,Em Piraanai - கண்ண பிரானைக் குறித்து,
கடி கமழ் பூ குழல் ஆய்ச்சி,Kadi Kamal Poo Kuzhal Aaychi - வாஸனை வீசா நின்ற பூக்களை அணிந்த கூந்தலை யுடைய யசோதை
ஆரா இன் அமுது உண்ண தருவன் நான்,Aaraa In Amudhu Unna Tharuvan Naan - (எவ்வளவு குடித்தாலும்) திருப்தி பிறவாத இனிய ஸ்தந்யத்தை
இது வரை உனக்கு உண்ணத் தந்துகொண்டிருந்த நான்

அம்மம் தாரேன்,Ammam Thaarein - (இன்று உன் ஸ்வரூபத்தை உள்ளபடி அறிந்தேனாகையால்) அம் மந்தர அஞ்சுவேன்”
என்ற மாற்றம்,Endra Maattram - என்று சொன்ன பாசுரத்தை
சொன்ன,Sonna - அருளிச் செய்த,
பார் ஆர்,Paar Aar - பூமி யெங்கும் நிறைந்துள்ள
தொல்,Thol - பழமையான
புகழான்,Pugazhaan - கீர்த்தியை யுடையராய்
புதுவை,Puthuvai - ஸ்ரீவில்லிபுத்தூருக்கு
மன்னன்,Mannan - நிர்வாஹகரான
பட்டர் பிரான்,Pattar Piraan - பெரியாழ்வாருடைய
பாடல்,Paadal - பாடலாகிய
ஏர் ஆர் இன் இசை மாலை,Er Aar In Isai Maalai - இயலழகாலே நிறைந்து இனிய இசையோடே கூடியிருந்துள்ள சொல் மாலையை
வல்லார்,Vallaar - ஓத வல்லவர்கள்
இருடீகேசன்,Erudheekesan - ஹ்ருஷிகேசனான எம்பெருமானுக்கு
அடியார்,Adiyaar - அடிமை செய்யப் பெறுவார்கள்.