| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2330 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – இன்னும் இவ்வளவேயோ-அவன் ஆஸ்ரித அர்த்தமாகப் பண்ணும் வியாபாரம் என்கிறார் – இன்னம் இவ்வளவேயோ–ஆஸ்ரித அர்த்தமாகப் பண்ணும் வியாபாரங்கள் அநேகம் அன்றோ -என்கிறார் – 49 | செற்றதுவும் சேரா இரணியனைச் சென்றேற்றுப் பெற்றதுவும் மாநிலம், பின்னைக்காய் – முற்றல் முரியேற்றின் முன்நின்று மொய்ம்பொழித்தாய், மூரிச்சுரியேறு சங்கினாய். சூழ்ந்து. | பின்னைக்காய், Pinnaikkai - நப்பின்னைப் பிராட்டிக்காக, முற்றல் முரி, Muttral Muri - முதிர்ந்த வலிமையையுடைய எற்றின், Etrin - ரிஷபங்களினுடைய முன் நின்று, Mun Nindru - எதிரில் (அஞ்சாதே) நின்று சூழ்ந்து, Sozhndhu - (அவற்றைச் சொல்லும் வகையை) ஆலோசித்து மொய்ம்பு ஒழித்தாய், Moymbu Ozhiththai - (அவற்றின்) மிடுக்கை ஒழித்தவனே! மூரி, Moori - பெரிதாய் சுரி ஏறு, Suri Aeru - (உள்ளே) சுழித்தலை யுடைத்தாயுமிருக்கிற சங்கினாய், Sanginai - சங்கைத் திருக்கையிலேந்தி யுள்ளவனே! (இப்படியிருக்கிற நீ) செற்றதுவும், Settrathuvum - கைகூசாமல் முடித்துப் போட்டதும் சேரா இரணியனை, Sera Iraniyanai - உன்னைச் சேர்த்துவாழமாட்டாத ஹிரண்யா ஸுரனை சென்று, Sendru - (மஹாபலிக்கலில்) சென்று ஏற்று, Aetru - யாசித்து பெற்றதும், Pettradhum - பெற்றுக் கொண்டதும் மா நிலம், Maa Nilam - பெரிய பூமியை. |