திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2332 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2332மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – இப்படி ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் உடைய ஆபன் நிவாரணம் பண்ணினவன் கிடீர் நமக்கும் எல்லாம் உபாய பூதனாவான் என்கிறார் – ஓர் ஆபத்து நீக்கி விட்ட அளவோ ஆபத்துக்கள் ஒன்றும் தட்டாதபடி பண்ணி ஸ்ரீ பரம பதத்திலே செல்ல நடத்துவான் அவனே என்கிறார் – சங்கல்ப்பத்தாலே ஆஸ்ரித பஷ பாதம் தோற்றாது என்று இறே மா முதலை கொன்றது முதலாக விச் செயல்கள் – இப்படி ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுடைய ஆபன் நிவாரணம் பண்ணினவன் கிடீர் நமக்கு எல்லாம் உபய பூதன் ஆவான் -என்கிறார் 51
அவனே அருவரையால் ஆநிரைகள் காத்தான், அவனே யணிமருதம் சாய்த்தான், – அவனே கலங்காப் பொருநகரம் காட்டுவான் கண்டீர், இலங்கா புரமெரித்தான் எய்து.
பதவுரை Show / Hide
அரு வரையால், Aru Varaiyaal - ஒருவரால் அசைக்கவும் முடியாததான கோவர்த்தன மலையினால்
ஆநிரைகள், Aaniraigal - பசுக்கூட்டங்கள்
காத்தான், Kaaththaan - ரக்ஷித்தருளினவன்
அவனே கண்டீர், Avane Kandheer - அப்பெருமானை யாவன்,
அணி மருதம், Ani Marudham - அழகாக நின்றுகொண்டிருந்த இரட்டை மருதமரங்களை
சாய்த்தான், Saayththaan - முறித்துத்தள்ளினவனும்
அவனே கண்டீர், Avane Kandheer - அப்பெருமானே யாவன்,
எய்து, Eydhu - அம்புகளைப் பிரயோகித்து
இலங்காபுரம், Ilangapuram - லங்காபட்டணத்தை
எரித்தான், Eriththaan - எரியவிட்டவனான
அவனே, Avane - அப்பெருமானே
கலங்கா பெருநகரம், Kalangaa Perunagaram - ஒருவகைக் கலக்கமுமில்லாத பரமபதத்தை
காட்டுவான், Kaattuvaan - காட்டித்தருவான்.