Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2332 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2332மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – இப்படி ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் உடைய ஆபன் நிவாரணம் பண்ணினவன் கிடீர் நமக்கும் எல்லாம் உபாய பூதனாவான் என்கிறார் – ஓர் ஆபத்து நீக்கி விட்ட அளவோ ஆபத்துக்கள் ஒன்றும் தட்டாதபடி பண்ணி ஸ்ரீ பரம பதத்திலே செல்ல நடத்துவான் அவனே என்கிறார் – சங்கல்ப்பத்தாலே ஆஸ்ரித பஷ பாதம் தோற்றாது என்று இறே மா முதலை கொன்றது முதலாக விச் செயல்கள் – இப்படி ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுடைய ஆபன் நிவாரணம் பண்ணினவன் கிடீர் நமக்கு எல்லாம் உபய பூதன் ஆவான் -என்கிறார் 51
அவனே அருவரையால் ஆநிரைகள் காத்தான்,
அவனே யணிமருதம் சாய்த்தான், – அவனே
கலங்காப் பொருநகரம் காட்டுவான் கண்டீர்,
இலங்கா புரமெரித்தான் எய்து.
அரு வரையால், Aru Varaiyaal - ஒருவரால் அசைக்கவும் முடியாததான கோவர்த்தன மலையினால்
ஆநிரைகள், Aaniraigal - பசுக்கூட்டங்கள்
காத்தான், Kaaththaan - ரக்ஷித்தருளினவன்
அவனே கண்டீர், Avane Kandheer - அப்பெருமானை யாவன்,
அணி மருதம், Ani Marudham - அழகாக நின்றுகொண்டிருந்த இரட்டை மருதமரங்களை
சாய்த்தான், Saayththaan - முறித்துத்தள்ளினவனும்
அவனே கண்டீர், Avane Kandheer - அப்பெருமானே யாவன்,
எய்து, Eydhu - அம்புகளைப் பிரயோகித்து
இலங்காபுரம், Ilangapuram - லங்காபட்டணத்தை
எரித்தான், Eriththaan - எரியவிட்டவனான
அவனே, Avane - அப்பெருமானே
கலங்கா பெருநகரம், Kalangaa Perunagaram - ஒருவகைக் கலக்கமுமில்லாத பரமபதத்தை
காட்டுவான், Kaattuvaan - காட்டித்தருவான்.