| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2332 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – இப்படி ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் உடைய ஆபன் நிவாரணம் பண்ணினவன் கிடீர் நமக்கும் எல்லாம் உபாய பூதனாவான் என்கிறார் – ஓர் ஆபத்து நீக்கி விட்ட அளவோ ஆபத்துக்கள் ஒன்றும் தட்டாதபடி பண்ணி ஸ்ரீ பரம பதத்திலே செல்ல நடத்துவான் அவனே என்கிறார் – சங்கல்ப்பத்தாலே ஆஸ்ரித பஷ பாதம் தோற்றாது என்று இறே மா முதலை கொன்றது முதலாக விச் செயல்கள் – இப்படி ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுடைய ஆபன் நிவாரணம் பண்ணினவன் கிடீர் நமக்கு எல்லாம் உபய பூதன் ஆவான் -என்கிறார் 51 | அவனே அருவரையால் ஆநிரைகள் காத்தான், அவனே யணிமருதம் சாய்த்தான், – அவனே கலங்காப் பொருநகரம் காட்டுவான் கண்டீர், இலங்கா புரமெரித்தான் எய்து. | அரு வரையால், Aru Varaiyaal - ஒருவரால் அசைக்கவும் முடியாததான கோவர்த்தன மலையினால் ஆநிரைகள், Aaniraigal - பசுக்கூட்டங்கள் காத்தான், Kaaththaan - ரக்ஷித்தருளினவன் அவனே கண்டீர், Avane Kandheer - அப்பெருமானை யாவன், அணி மருதம், Ani Marudham - அழகாக நின்றுகொண்டிருந்த இரட்டை மருதமரங்களை சாய்த்தான், Saayththaan - முறித்துத்தள்ளினவனும் அவனே கண்டீர், Avane Kandheer - அப்பெருமானே யாவன், எய்து, Eydhu - அம்புகளைப் பிரயோகித்து இலங்காபுரம், Ilangapuram - லங்காபட்டணத்தை எரித்தான், Eriththaan - எரியவிட்டவனான அவனே, Avane - அப்பெருமானே கலங்கா பெருநகரம், Kalangaa Perunagaram - ஒருவகைக் கலக்கமுமில்லாத பரமபதத்தை காட்டுவான், Kaattuvaan - காட்டித்தருவான். |