Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2333 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2333மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – கீழே ப்ரஸ்துதமான ஸ்ரீ ராம வ்ருத்தாந்தம் தன்னிலே திரியவும் ஆழங்கால் பட்டுப் பேசுகிறார் – கீழே ஸ்ரீ கலங்கா பெரு நகரம் காட்டுவான் -என்றாரே ருசி உடையாருக்கு ஸ்ரீ பரமபதம் கொடுக்கும் அத்தனையோ என்னில் –ருசி பிறப்பிப்பானும் அவனே – என்கிறது – கீழ் ப்ரஸ்துதமான ஸ்ரீ ராம வ்ருத்தாந்தம் தன்னிலே திரியவும் ஆழம் கால் பட்டு அத்தைப் பேசுகிறார் – 52
எய்தான் மராமரம் ஏழும் இராமனாய்,
எய்தானம் மான்மறியை ஏந்திழைக்காய், – எய்ததுவும்
தென்னிலங்கைக் கோன்வீழச் சென்று குறளுருவாய்
முன்னிலம்கைக் கொண்டான் முயன்று.
இராமன் ஆய், Iraaman Aay - ஸ்ரீராமனாகத் திருவவதரித்து
மராமரம் ஏழும், Maraamaram Ezhum - ஸப்தஸால உருஷங்களையும்
எய்தான், Eyththaan - அம்பு செலுத்தித் துளைத்தான்,
ஏந்து இழைக்கு ஆய், Ainthu Izaikku Aay - தரிக்கப்பட்ட ஆபரணங்களையுடைய பிராட்டிக்காக
அ மான் மறிய, A Maan Mariya - அப்படிப்பட்ட மாரீசமாயா மிருகக்குட்டியை
எய்தான், Eyththaan - பின்சென்றான்,
எய்த்துவும், Eyththuvum - அம்புகளைச் செலுத்தினதும்
தென் இலங்கை கோன் வீழ, Then Ilangai Kon Veezha - தென்னிலங்கைக்கு அரசனான இராவணன் முடியும்படியாகவாம்,
முன், Mun - முன்பொரு காலத்திலே
குறள் உரு ஆய், Kurall Uru Aay - வாமன ரூபியாய்
சென்று, Sendru - மாவலியிடத்திற் சென்று
முயன்று, Muyandru - (வடிவழகு காட்டுதல், மழலைச் சொற்களைச் சொல்லுதல் முதலிய) முயற்சிகளைச் செய்து
நிலம் கைக் கொண்டான், Nilam Kaik Kondaaan - பூமியைக் கைப்பற்றினான்.