| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2334 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – ப்ரஸ்துதமான ஸ்ரீ வாமன்னோடு போலியான ஸ்ரீ வடதள சாயியை அனுபவிக்கிறார் – ஸ்ரீ எம்பெருமான் படி இதுவான பின்பு மேல் வீழ்ந்து அனுபவி -என்கிறார் – துர்க் கடங்களை கடிப்பிக்க வல்லவன் என்கிறார் – ப்ரஸ்துதமான ஸ்ரீ வாமனனோடு போலியான ஸ்ரீ வட தள சாயியை ஆஸ்ரயி என்று தம் உள்ளத்தைத் தூண்டுகிறார் – 53 | முயன்று தொழுநெஞ்சே. மூரிநீர் வேலை, இயன்றமரத் தாலிலையின் மேலால், – பயின்றங்கோர் மண்ணலங்கொள் வெள்ளத்து மாயக் குழவியாய், தண்ணலங்கல் மாலையான் தாள். | மூரி வேலை, Moori Vela - பழையதான நீரை யுடைத்தான ஸமுத்தர்திலே ஆலமரத்து இலையின் மேலால், Alamarathu Ilaiyin Melal - ஆலமரத்தின் இலைமீது பயின்று, Payinru - நெடுங்காலம் சாய்ந்திருந்தது அங்கு, Angu - அங்கே மண், Man - பூமியினுடைய நலம், Nalam - நன்மையை கொள், Kol - அபஹரித்த வெள்ளத்து, Vellathu - பிரளய வெள்ளத்திலே ஓர் மாயம் குழவி ஆய், Or Maayam Kuzhavi Aay - ஆச்சரியமான ஒரு குழந்தையாய் தண் அலங்கல் மாலையான், Than Alankal Maalaiyaan - குளிர்ந்து அசைகின்ற மாலையை யுடையவனான எம்பெருமானுடைய தான், Thaan - திருவடிகளை நெஞ்சே, Nenchae - நெஞ்சமே! முயன்று தொழு, Muyanru Thozhu - உத்ஸாஹங்கொண்டு வணங்கு. |