| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2335 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – ஸ்ரீ வடதள சாயி வ்ருத்தாந்தத் தோடு சேரச் சொல்லலாம் படியான ஸ்ரீ கிருஷ்ண வ்ருத்தாந்தத்தை அனுபவிக்கிறார் – ஸ்ரீ வட தள சாயி விருத்தாந்தத்தோடு ஒக்கச் சொல்லலாம் படியான ஸ்ரீ கிருஷ்ண விருத்தாந்தத்தை அனுபவிக்கிறார் – 54 | தாளால் சகடம் உதைத்துப் பகடுந்தி, கீளா மருதிடைபோய்க் கேழலாய், – மீளாது மண்ணகலம் கீண்டங்கோர் மாதுகந்த மார்வற்கு, பெண்ணகலம் காதல் பெரிது. | சகடம், Sakadam - சகடாஸுரனை தாளால், Thaalal - திருவடியாலே உதைத்து, Udaithu - உதைத் தொழித்தவனாயும் பகடு, Pagadu - (குவலயாபீட மென்கிற) யானையை உந்தி, Undhi - உதைத்துத் தள்ளினவனாயும் மருது இடைபோய், Maruthu Idaipoy - மருத மரங்களின் நடுவே தவழ்ந்து சென்று சீனா, Cheena - (அம்மரங்களை) முறிந்துவிழச் செய்தவனாயும் கேழல் ஆய், Kezhal Aay - வராஹரூபியாய்க் கொண்டு மீளாது, Meelaadhu - காரியம் தலைக்கட்டாமல் திரும்பி வருவதில்லையென்று ஸங்கல்பித்துக் கொண்டு சென்று அகலம் மண்கீண்ட, Agalam Mankeenda - அகன்ற பூமியை (அண்டபித்தியில் நின்றும்) ஒட்டுவிடுவித்தெடுத்தவனாயும் ஓர் மாது உகந்த மார்வற்கு, Or Maathu Ugandha Maarvarku - ஒப்பற்ற பெரிய பிராட்டியாரை விரும்பியிருக்கின்ற திருமார்பையுடையவனாயுமுள்ள எம்பெருமானுக்கு பெண் அகலம், Pen Agalam - பூமிப்பிராட்டியினுடைய திருமேனியில் காதல், Kaadhal - ஆசையானது பெரிது, Peridhu - கரை புரண்டிருப்பது. |