| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2336 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – ஸ்ரீ பூமிப் பிராட்டி பக்கல் இப்படி வத்சலனாய் உள்ளவன் உடைய அழகை அனுபவிக்கிறார் – இப்படி ஸ்ரீ பூமிப பிராட்டி பக்கல் பெரும் பிச்சானாவான் அழகை அனுபவிக்கிறார் – 55 | பெரிய வரைமார்வில் பேராரம் பூண்டு, கரிய முகிலிடைமின் போல, – தெரியுங்கால் பாணொடுங்க வண்டறையும் பங்கயமே, மற்றவன்றன் நீணெடுங்கண் காட்டும் நிறம். | பெரியவரை மார்வில், Periyavarai Marvil - பெரிய மலைபோன்ற திருமார்பிலே பேர் ஆரம்பூண்டு, Per Arambundhu - பெரிய ஹாரத்தை அணிந்துகொண்டு திரியுங்கால், Thiriyungkal - உலாவினால் கரிய முகிலிடை மின் போல, Kariya Mukilidai Min Pola - காளமேகத்திலே மின்னல் மின்னினாற் போன்றிருக்கும்! மற்று, Mattru - அன்றியும், அவன் தன், Avan Than - அப்பெருமானுடைய நீள் நெடு கண், Neel Nedu Kan - நீண்டு பரந்த திருக்கண்களினுடைய நிறம், Niram - நிறத்தை பாண் ஒடுங்க வண்டு அறையும் பங்கயமே காட்டும், Paan Odunga Vandu Arayum Pangkayame Kaattum - பாட்டென்று பேர் பெற்றவையெல்லாம் ஒடுங்கும் படியாக (அதிமதுரமாக) வண்டுகள் இருந்து பாடப்பெற்ற தாமரைப்பூவே காட்டித்தரும். |