| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2337 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – இப்படிப் பட்டவனுடைய அழகை அனுபவித்துப் போமித்தனை போக்கி இன்ன படிப் பட்டு இருக்கும் என்று கொண்டு நம்மால் பரிச்சேதிக்கப் போகாது கிடீர் என்கிறார் – பிரயோஜ்னத்திலே சொல்லில் சொல்லும் அத்தனை – என்னுடைய ஸ்ரீ ஸ்வாமியினுடைய ரூபத்தை இன்னபடி இருக்கும் என்று சொல்லப் போகாது – பிரயோஜகத்தை சொல்லும் அத்தனை என்கிறார் – இவனுடைய அழகை அனுபவித்துக் குமிழ் நீர் உண்ணும் அத்தனை ஒழிய நம்மால் அளவிட்டுப் பேச ஒண்ணாது கிடீர் என்கிறார் – 56 | நிறம்வெளிது செய்து பசிது கரிதென்று, இறையுருவம் யாமறியோ மெண்ணில், – நிறைவுடைய நாமங்கை தானும் நலம்புகழ வல்லளே, பூமங்கை கேள்வன் பொலிவு. | இறை, Irai - ஸர்வேச்வரனுடைய உருவம், Uruvam - திவ்யமங்கள விக்ரஹமானது நிறம், Niram - நிறத்தால் வெளுத்திருக்குமோ (அல்லது) செய்து, Seithu - சிவந்திருக்குமோ, (அல்லது) பசிது, Pasithu - பச்சென்றிருக்குமோ, (அல்லது) கரிது, Karithu - கறுத்திருக்குமோ, என்று, Endru - எவ்வண்ணமா யிருக்குமென்று எண்ணில், Ennil - ஆராயுமிடத்தில் யாம் அறியோம், Yaam Ariyom - நாம் அறியமாட்டோம் (இது நிற்க) நிறைவு உடைய, Niraivu Udaiya - ஜ்ஞான சக்திகளில் பூர்த்தியை உடையவளான நா மங்கை தானும், Na Mangai Thanum - ஸரஸ்வதீ தேவியும் பூ மங்கை கேள்வன், Poo Mangai Kelvan - பூவிற்பிறந்த பெரிய பிராட்டிக்குக் கணவனான எம்பெருமானுடைய பொலிவு, Polivu - பூர்த்தியை நலம் புகழ வல்லனே, Nalam Pugazha Vallanai - நன்றாகப் புகழ சக்தி யுடையவனோ |