Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2338 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2338மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – இப்படிப் பட்ட பெருமையை யுடையவனை அனுசந்திக்கும் இதுவே கிடாய் நமக்கு உத்க்ருஷ்டமாகை ஆகிறது என்கிறார் – ஸ்ரீ கருடத்வஜனுமாய் ஸ்ரீ யபதியும் ஆனவன் திருவடிகளை ஆஸ்ரயி -என்கிறார் – முடியாது என்று பேசாது இராதே அவனை ஆஸ்ரயிக்கில் எல்லாரும் மேலாவது என்கிறார் – ஸ்ரீ கருட வாஹனனுடைய திருவடிகளை ஆஸ்ரயி என்கிறது – ஏவம் விதமான வைபவத்தை யுடையவனை அநுஸந்திக்குமதுவே நமக்கும் உத்கர்ஷ ஹேது என்கிறார் – 57
பொலிந்திருகண்ட கார்வானில் மின்னேபோல் தோன்றி,
மலிந்து திருவிருந்த மார்வன், – பொலிந்து
கருடன்மேல் கொண்ட கரியான் கழலே,
தெருடன்மேல் கண்டாய் தெளி.
திரு, Thiru - பிராட்டியானவள்,
பொலிந்து இருண்ட கார், Polinthu Irunda Kaar - செறிந்து இருளையுடைத்தான கார் காலத்திலுண்டான
வானில், Vaanil - மேகத்தில்
மின்னே போல் தோன்றி, Minne Pol Thondri - மின்னல் போல் பிரகாசித்து
மலிந்து இருந்த மார்வன், Malinthu Irundha Marvan - பொருந்தி யிருக்கப்பெற்ற திருமார்பை யுடையனாய்
பொலிந்த கருடன் மேல் கொண்ட, Polintha Karudan Mel Konda - விளங்குகின்ற கருடனால் மேற்றகொள்ளப்பட்டவனான
கரியான், Kariyan - கருநிறப் பெருமானுடைய
கழலே, Kazhale - திருவடிகளே
தெருள்தன் மேல், Therulthan Mel - ஜ்ஞாநத்திற்கு மேற்பட்டதான பக்திக்கு விஷயமென்று
தெளி கண்டாய், Theli Kandaai - (நெஞ்சே!) தெளிந்திரு