Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2339 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2339மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – இப்படிப் பட்ட ஐஸ்வர்யத்தை உடையவனை ஆஸ்ரயிக்கும் போது கண்ணாலே காண வேணுமே -என்ன காணலாம் படி ஸ்ரீதிரு மலையிலே நின்றான் என்கிறார் – அஸ்மின் மயா சார்த்தம் -என்று பிராட்டி செய்த செயலை ஸ்ரீ திருமலையில் திர்யக்குகளும் அனுவர்த்தியா நின்றது என்கிறார் – இப்படிப்பட்ட ஐஸ்வர்யத்தை யுடையவன் கண்ணாலே காணலாம் படி ஸ்ரீ திருமலையிலே வந்து நின்றான் என்கிறார் – 58
தெளிந்த சிலாதலத்தின் மேலிருந்த மந்தி,
அளிந்த கடுவனையே நோக்கி, – விளங்கிய
வெண்மதியம் தாவென்னும் வேங்கடமே, மேலொருநாள்
மண்மதியில் கொண்டுகந்தான் வாழ்வு.
தெளிந்த, Thelindha - ஸ்வச்சமாயிருக்கிற
சிலாதலத்தின் மேல் இருந்த மந்தி, Silaadhalaththin Mel Irundha Manthi - கற்பாறையின் மீது இருக்கும் பெண் குரங்கானது.
அளித்த கடுவனை நோக்கி, Alitha Kaduvana Nokki - ஸ்நேஹமுள்ள ஆண் குரங்கை நோக்கி
விளங்கிய வெண் மதியம் தான் என்றும் வேங்கடம், Vilangiya Ven Mathiyam Thaan Endrum Vengadam - ‘விளங்குகின்ற வெளுத்த சந்திரன் (ப்பிடித்துக்) கொடு‘ என்ற சொல்லும்படிரு யிருக்கிற திருவேங்கடம்
மேல் ஒருநாள், Mel Orunaal - பண்டொரு காலத்தில்
மண், Man - பூமியை
மதியின், Mathiyin - தனது புத்தி சாதுரியத்தினால்
கொண்டு, Kondhu - (மாவலியிடத்தில் பெற்றுக்கொண்டு)
உகந்தான், Uganthaan - திருவுள்ள முவந்த ஸர்வேச்வான்
வாழ்வு, Vaazhvu - வாழுமிடம்