| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 234 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-இரண்டாம் திருமொழி - அஞ்சனவண்ணனை) (யசோதப்பிராட்டி கண்ணனைக் கன்றின்பின் போக்கினதை எண்ணி அநுதபித்தல்) (கலிநிலைத்துறை) 1 | அஞ்சன வண்ணனை ஆயர் குலக் கொழுந்தினை மஞ்சன மாட்டி மனைகள் தோறும் திரியாமே கஞ்சனைக் காய்ந்த கழலடி நோவக் கன்றின் பின் என் செயப் பிள்ளையைப் போக்கினேன் எல்லே பாவமே–3-2-1 | அஞ்சனம் வண்ணனை,Anjanam Vannanai - மை போன்ற நிறத்தை யுடையனும் ஆயர் கோலம்,Aayar Kolam - இடைக் கோலம் பூண்டுள்ளவனும் கொழுந்தினை,Kozhuthinai - (அவ் விடையர்க்குத்) தலைவனும் பிள்ளையை,Pillaiyai - (எனக்குப்) பிள்ளையுமான கண்ணனை மனைகள் தொறும்,Manaigal Thorum - (தன் வீட்டிற் போலவே) அயல் வீடுகள் தோறும் திரியாமே,Thiriyame - (இஷ்டப்படி) திரிய வொட்டாமல் மஞ்சனம் ஆட்டி,Manjanam Aatti - (காலையில் குள்ளக் குளிர) நீராட்டி, கஞ்சனை,Kanjanai - கம்ஸனை காய்ந்த,Kaayndha - சீறி யுதைத்த கழல்,Kazhal - வீரக் கழலை அணிந்துள்ள அடி,Adi - திருவடிகள் நோவ,Nova - நோம் படியாக கன்றின் பின்,Kanrin Pin - கன்றுகளின் பின்னே (மேய்க்கப் போ வென்று) என் செய போக்கினேன்,En Seiya Pokkinean - ஏதுக்காகப் போக விட்டேன்!; எல்லே பாவமே,Elle Paavame - மஹாபாபம்! மஹாபாபம். |