Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2340 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2340மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – கீழ் ஸ்ரீ கரியான் கழலே தெருள் என்று திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்தார் – அப்படிப் பட்ட திருவடிகளைத் தாம் கிட்டி அனுபவிக்கிறார் – ஸ்ரீ சர்வேஸ்வரனைப் பற்றி ஆத்மாவுக்கு வகுத்த சம்பத் என்று வ்யுத்புத்தி பண்ணினேன் – ஸ்ரீ கரியான் கழலே தெருடன் மேல் கண்டாய் -என்று திரு உள்ளத்தைக் குறித்து அனுபவிக்கச் சொல்லி- திருவடிகளைத் தாம் கிட்டி அனுபவித்த படியை அருளிச் செய்கிறார் – 59
வாழும் வகையறிந்தேன் மைபோல் நெடுவரைவாய்,
தாழும் அருவிபோல் தார்கிடப்ப, – சூழும்
திருமா மணிவண்ணன் செங்கண்மால், எங்கள்
பெருமான் அடிசேரப் பெற்று.
மை போல் நெடு வரை வாய், Mai Pol Nedu Varai Vaai - மைபோன் றிருண்டு பெரிதான மலையிடத்திலே
தாழும், Thaalum - இருபக்கமும் தாழ விழிந்து பாய்கின்ற
அருவி போல், Aruvi Pol - அருவிபோலே
தார் கிடப்ப, Thaar Kidappa - மாலை சாத்தப்பட்டிருக்க, (அதிலே யீடுபட்டு)
சூழும், Soolum - ஒருக்ஷணமும் விட்டுப்பிரியாமல் வளைத்துக் கொண்டிருக்கிற
திரு, Thiru - பிராட்டியை யுடையவனும்
மா மணி வண்ணன், Maa Mani Vannan - நீலமணிபோன்ற நிறத்தை யுடையவனும்
செம் கண்மால், Sem Kanmaal - செந்தாமரை போன்ற திருக்கண்களையுடைய பெரியோனுமான
எங்கள் பெருமான், Engal Perumaan - எம்பெருமானுடைய
அடி, Adi - திருவடிகளை
சேர பெற்று, Sera Petru - அஞகப் பெற்றதனால்
வாழும் வகை அறிந்தேன், Vazhum Vagai Arindhen - உஜ்ஜீவிக்கும் வழி தெரிந்தவனானேன்.