| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2341 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – உமக்கு வாழ்விலே அந்யமாகில் பிரதி பந்தகம் போனால் அன்றோ வாழலாவது – விரோதி செய்த படி என் என்ன அது போக்குகை அவனுக்கு பரமாய் விட்டது என்கிறார் – பிரதிபந்தகங்கள் போனால் அன்றோ வாழும் படி யாவது என்னில் – அவன் தானே பிரதிபந்தகங்களைப் போக்கும் என்கிறது – உமக்கு வாழ்விலே அந்வயமாகில் அதுக்கு பிரதிபந்தகமானவை செய்தது என் என்ன- அது போக்குகை அவனுக்கு பரமாய் விட்டது -என்கிறார் – 60 | பெற்றம் பிணைமருதம் பேய்முலை மாச்சகடம், முற்றக்காத் தூடுபோ யுண்டுதைத்து, – கற்றுக் குணிலை விளங்கனிக்குக் கொண்டெறிந்தான், வெற்றிப் பணிலம்வாய் வைத்துகந்தான் பண்டு. | பெற்றம், Petram - பசுக்களை முற்ற காத்து, Mutra Kaathu - ஒன்று தப்பாமல் ரக்ஷித்தவனாயும் பிணை மருதம் ஊடு போய், Pinai Marudham Oodu Poi - இரட்டை மருத மாங்களிடையே சென்றவனாயும் பேய் முலை உண்டு, Pei Mulai Undu - பூதனையின் முலையை உண்டவனாயும் மா சகடம் உதைத்து, Maa Sakadam Uthaithu - பெரிய சகடத்தை உதைத் தொழித்தவனாயும் கன்று குணிலை கொண்டு, Kandru Gunilai Kondo - கன்றாகிய எறிதடியைக் கொண்டு விளங்கனிக்கு எறிந்தான், Vilanganikku Erindhaan - விளாம்பழத்தின் மீது எறிந்தவனாயுமுள்ள எம்பெருமான் பண்டு, Pandhu - முன்பொரு காலத்தில் வெற்றி பணிலம், Vetri Panilam - ஜயசீலமான சங்கை வாய் வைத்து, Vaai Vaiththu - வாயிலே வைத்து ஊதி உகந்தான், Uganthaan - மகிழ்ந்தான் |