| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2344 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – இந்த தேசங்களிலே வந்து சந்நிஹிதனான அவன் தான் சால சீலவானாய் இருப்பான் ஒருவன் கிடீர் என்கிறார் – தாழ்வுக்கு எல்லையான சௌசீல்யம் – சாதக வேஷத்தையும் சித்தமான வேஷத்தையும் ஒக்க தரிப்பதே – என்கிறார் – ஸித்தமான வேஷத்தையும்-சாதகமான வேஷத்தையும் -ஓக்க தரிப்பதே -இது ஒரு சீலவத்தையே -என்கிறார் – இத் தேசங்களில் வந்து சந்நிஹிதன் ஆனவன் சீலாதிகனாய் இருக்குமவன் கிடீர் -என்கிறார் – 63 | தாழ்சடையும் நீண்முடியும் ஒண்மழுவும் சக்கரமும், சூழரவும் பொன்னாணும் தோன்றுமால்,- சூழும் திரண்டருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு, இரண்டுருவு மொன்றாய் இசைந்து. | தாழ் சடையும், Thazh Sadayum - தாழக் கட்டின ஜடையும் நீள் முடியும், Neel Mudiyum - நீண்ட திருவபிஷேகமும் ஒண் மழுவும், On Mazhuvum - அழகிய மழுவென்னுமாயுதமும் சக்கரமும், Chakkaramum - திருவாழியாழ்வானும் சூழ் அரவும், Sool Aravum - சுற்றிலும் அணிந்துள்ள நாகாபரணமும் பொன் நாணும், Pon Naanum - பொன் னரைநாணுமாய்க்கொண்டு இரண்டு உருவும், Irandu Uruvum - ஒன்றுக்கொன்று சேராச் சேர்த்தியாயிருக்கிற இரண்டு வடிவும் சூழும் திரண்டு அருவி பாயும் திரு மலை மேல் எந்தைக்கு, Soolum Thirandu Aruvi Paayum Thiru Malai Mel Endhaikku - நாற்புறமும் திரள்திரளாக அருவிகள் பெருகப் பெற்ற திருமலைமேலுள்ள அப்பனுக்கு ஒன்று ஆய் இசைந்து தோன்றும், Onru Aay Isainthu Thonrum - ஒரு வடிவமாய் அமைந்துவிளங்கா நின்றது ஆல், Aal - ஆச்சரியம்! |