| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2345 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – இவன் தான் –பிரயோஜனாந்தர பரராய் தேவதாந்தரரான தேவர்களுக்கும் கூடத் தன்னை அழித்துத் கார்யம் செய்து கொடுப்பான் -என்று அவன் ஸ்வ பாவத்தை அனுசந்தித்து அவனுக்குப் பரிகிறார்- பிரயோஜனாந்தர பரர்க்கும் உடம்பு நோவக் கடல் கடைந்து அபேக்ஷித சம்விதானம் பண்ணுமவன் ஸ்வ பாவத்தை அனுசந்தித்து அவனுக்குப் பரிகிறார் 64 | இசைந்த அரவமும் வெற்பும் கடலும், பசைந்தங் கமுது படுப்ப, – அசைந்து கடைந்த வருத்தமோ கச்சிவெஃ காவில், கிடந்திருந்து நின்றதுவும் அங்கு. | இசைந்த, Isainthu - கடைகயிறாகக் கொள்வதற்குத் தகுதியான அரவமும், Aravamum - வாஸுகிநாகமும் (இசைந்த), Isainthu - மத்தாக நாட்டுவதற்குத் தகுதியான வெற்பும், Verpum - மந்தரபர்வதமும் (இசைந்த), Isainthu - தாழியாக்குவதற்குத் தகுதியான கடலும், Kadalum - கடலும் (ஆகிய இம்மூன்றையும்) பசைந்து, Pasainthu - ஒன்றோடொன்று ஸம்பந்தப் படுத்தி அங்கு, Angu - அந்தக்கடலிலே அமுது, Amuthu - அம்ருதமானது படுப்ப, Paduppa - உண்டாம்படி அசைந்து, Asainthu - அலைச்சல்பட்டு கடைந்த வருத்தமோ, Kadaindha Varuththamo - கடைந்த்தனா லுண்டான ஆயாஸத்தினாலோ கச்சி, Kacchi - காஞ்சீபுரத்திலுள்ள வெஃகாவில், Veghavil - திருவெஃகாவில் கிடந்து, Kidandhu - சயனித்துக் கொண்டும் அங்கு, Angu - அக்காஞ்சீபுரத்தல் (திருப்பாடகத்தில்) இருந்து, Irundhu - வீற்றிருந்தும் (கிருவூரகத்தில்) நின்றதுவும், Nindrathuvum - நின்று கொண்டும் இருப்பது? |