Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2346 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2346மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – அம்ருத மதனம் பண்ணின ஆயாசமே யன்றிக்கே மற்றுள்ள அவதாரங்களிலும் ஆயாச ஹேதுவான வியாபாரங்களை யருளிச் செய்கிறார் – அம்ருத மதனம் பண்ணின ஆயாசம் மாத்திரம் அன்றிக்கே அல்லாத அவதாரங்களிலும் அலைச்சலுக்கு அடியான அவன் செயல்களை அனுசந்திக்கிறார் – 65
அங்கற் கிடரின்றி அந்திப் பொழுதத்து,
மங்க இரணியன தாகத்தை,- பொங்கி
அரியுருவ மாய்ப்பிளந்த அம்மா னவனே,
கரியுருவம் கொம்பொசித்தான் காய்ந்து.
அங்கற்கு, Angarku - பிள்ளையான ப்ரஹ்லாதனுக்கு
இடர் இன்றி, Idar Inri - ஒருதுன்பமும் வராதபடி
அந்தி பொழுத்தது, Andhi Pozhuththathu - ஸாயங்காலத்தில்
இரணியனது, Iraniyanadhu - ஹரண்யனுடைய
ஆகத்தை, Aagaththai - மார்வை
மங்க, Mang - அழிந்து போம்படியாக
அரிஉருவம் ஆய் பொங்கி, Ariuruvam Aayi Pongi - நரஸிம்ஹருபியாய்க்கிளர்ந்து
பிறந்த, Pirandha - கிழித்தொழிந்த
அம்மான், Ammaan - அவனே
காய்ந்து, Kaayndhu - சீறி
கரி உருவம், Kari Uruvam - கறுத்தவுருவத்தை யுடைத்தாயிருந்த குவலயா பீடத்தினுடைய
கொம்பு, Kombu - தந்தத்தை
ஒசித்தான், Osiththaan - முறித்துப் போட்டான்