| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2347 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – தானொரு வடிவு கொண்டு வந்து விரோதியைப் போக்கினான் என்னுமது ஓர் ஏற்றமோ – கண் வளர்ந்து அருளுகிற இடத்திலே வந்து கிட்டின விரோதிகளை முடிக்க வல்லவனுக்கு என்கிறார் – உணர்த்தி உண்டான போது விரோதி நிரசனம் பண்ணுகை ஓர் ஏற்றமோ அவதானம் இன்றிக்கே இருக்கச் செய்தே விரோதிகளை முடிக்க வல்லவனுக்கு என்கிறார் – உணர்த்தி உண்டான போது விரோதி நிரசனம் பண்ணினது ஓர் ஏற்றமோ -அவதானம் இன்றிக்கே இருக்கச் செய்தே விரோதிகளை முடிக்க வல்லவனுக்கு -என்கிறார் – தான் ஒரு வடிவு கொண்டு வந்து விரோதியைப் போக்கினான் என்கிற இது ஓர் ஏற்றமோ -கண் வளர்ந்து அருளுகிற இடத்தே வந்து கிட்டின விரோதிகளை முடிக்க வல்லவனுக்கு -என்கிறார் – 66 | காய்ந்திருளை மற்றிக் கதிரிலகு மாமணிகள், ஏய்ந்த பணக்கதிர்மேல் வெவ்வுயிர்ப்ப, – வாய்ந்த மதுகை டவரும் வயிறுருகி மாண்டார், அதுகே டவர்க்கிறுதி ஆங்கே. | காய்ந்து, Kaayndhu - சீறி இருளை மாற்றி, Irulai Maatri - இருளைப் போக்கி கதிர் இலகு, Kathir Ilaku - ஒளிவிடாநின்றுள்ள மா மணிகள், Maa Manigal - சிறந்த ரத்னங்கள் ஏய்ந்த, Eyndha - பொருத்தியிருக்கிற பணம், Panam - (தன்னுடைய) படங்களினுடைய கதிர்மேல், Kathirmeel - ஒளிக்குமேலே (திருவனந்தாழ்வான்) வெவ்வுயிர்ப்ப, Veppuyirppa - பெருமூச்சுவிட, வாய்ந்த, Vaayndha - கிட்டின மது கைடபரும், Madhu Kaidaparum - மதுகைடபர்கள் வயிறு உருகி மாண்டார், Vayiru Urugi Maandhaar - குடலழுகி முடிந்து போனார்கள் அவர்க்கு, Avarkku - அந்த மதுகைடபர் களைப்போலே பிரதிகூலராய் பருமவர்களுக்கு ஆங்கு, Aangu - அவ்வண்ணாமாகவே அது இறுதி கேடு, Adhu Irudhi Kaedu - அப்படிப்பட்ட ப்ராண விநாசமான கேடே (பலிக்கும்) |