Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2349 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2349மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – இப்படிப் பட்டவனுடைய அழகை அனுபவிக்கும் போது ஸ்ரீ திருப்பாற் கடல் ஏறப் போக வேண்டா ஸ்ரீ திருமலையிலே அனுபவிக்கலாம் கிடீர் என்கிறார் – இப்படிப்பட்டவனுடைய அழகை அனுபவிக்கைக்காக ஸ்ரீ திரு பாற் கடல் ஏறப் போக வேண்டா – ஸ்ரீ திரு மலையிலே அனுபவிக்கலாம் கிடீர் -என்கிறார் 68
பார்த்த கடுவன் சுனைநீர் நிழற்கண்டு, பேர்த்தோர்
கடுவனெனப் பேர்ந்து, – கார்த்த
களங்கனிக்குக் கைநீட்டும் வேங்கடமே, மேனாள்
விளங்கனிக்குக் கன்றெறிந்தான் வெற்பு.
சுனை நீர், Sunai Neer - திருமலைச் சுனையின் நீரிலே
பார்த்த, Paarttha - கவிந்து பார்த்த
கடுவன், Kadhuvan - குரங்கானது
நிழல் கண்டு, Nizhal Kandu - நீரினுள்ளே பிரதி பலிக்கிற தன்னிழலைக்கண்டு
பேர்த்து ஓர் கடுவன் என, Perthu Oru Kadhuvan Enna - (தனக்கு எதிரியான) வேறொரு குரங்கு இருப்பதாக ப்ரமித்து
பேர்ந்து, Perndhu - அவ்விடம் விட்டு நீங்கி (மறுபடியும் சாபல்யத்தாலே)
கார்த்த கனங்கனிக்கு கை நீட்டும், Kaartha Kanangkanikku Kai Neettum - கரிய களாப்பழத்தைப் பறித்துத்தா வென்று கை நீட்டப்பெற்ற
வேங்கடமே, Venkatame - திருவேங்கடந்தான்
மேல் நாள், Mel Naal - முன்பொருகாலத்தில்
விள கனிக்கு, Vila Kanikku - (அஸுராவேசங்கொண்ட) விளாம்பழங்கள் உதிர்வதற்காக
கன்று எறிந்தான், Kandru Erindhaan - வத்ஸாஸுரனை (எறிகுணிலாகக் கொண்டு) வீசியெறிந்த பெருமானுடைய
வெற்பு, Verppu - திருமலை.