| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2349 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – இப்படிப் பட்டவனுடைய அழகை அனுபவிக்கும் போது ஸ்ரீ திருப்பாற் கடல் ஏறப் போக வேண்டா ஸ்ரீ திருமலையிலே அனுபவிக்கலாம் கிடீர் என்கிறார் – இப்படிப்பட்டவனுடைய அழகை அனுபவிக்கைக்காக ஸ்ரீ திரு பாற் கடல் ஏறப் போக வேண்டா – ஸ்ரீ திரு மலையிலே அனுபவிக்கலாம் கிடீர் -என்கிறார் 68 | பார்த்த கடுவன் சுனைநீர் நிழற்கண்டு, பேர்த்தோர் கடுவனெனப் பேர்ந்து, – கார்த்த களங்கனிக்குக் கைநீட்டும் வேங்கடமே, மேனாள் விளங்கனிக்குக் கன்றெறிந்தான் வெற்பு. | சுனை நீர், Sunai Neer - திருமலைச் சுனையின் நீரிலே பார்த்த, Paarttha - கவிந்து பார்த்த கடுவன், Kadhuvan - குரங்கானது நிழல் கண்டு, Nizhal Kandu - நீரினுள்ளே பிரதி பலிக்கிற தன்னிழலைக்கண்டு பேர்த்து ஓர் கடுவன் என, Perthu Oru Kadhuvan Enna - (தனக்கு எதிரியான) வேறொரு குரங்கு இருப்பதாக ப்ரமித்து பேர்ந்து, Perndhu - அவ்விடம் விட்டு நீங்கி (மறுபடியும் சாபல்யத்தாலே) கார்த்த கனங்கனிக்கு கை நீட்டும், Kaartha Kanangkanikku Kai Neettum - கரிய களாப்பழத்தைப் பறித்துத்தா வென்று கை நீட்டப்பெற்ற வேங்கடமே, Venkatame - திருவேங்கடந்தான் மேல் நாள், Mel Naal - முன்பொருகாலத்தில் விள கனிக்கு, Vila Kanikku - (அஸுராவேசங்கொண்ட) விளாம்பழங்கள் உதிர்வதற்காக கன்று எறிந்தான், Kandru Erindhaan - வத்ஸாஸுரனை (எறிகுணிலாகக் கொண்டு) வீசியெறிந்த பெருமானுடைய வெற்பு, Verppu - திருமலை. |