| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 235 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-இரண்டாம் திருமொழி - அஞ்சனவண்ணனை) (யசோதப்பிராட்டி கண்ணனைக் கன்றின்பின் போக்கினதை எண்ணி அநுதபித்தல்) (கலிநிலைத்துறை) 2 | பற்று மஞ்சள் பூசிப் பாவை மாரொடு பாடியில் சிற்றில் சிதைத்து எங்கும் தீமை செய்து திரியாமே கற்றுத் தூளி யுடை வேடர் கானிடைக் கன்றின் பின் எற்றுக்கு என் பிள்ளையைப் போக்கினேன் எல்லே பாவமே–3-2-2 | பாடியில்,Paadiyil - திருவாய்ப் பாடியில் பற்று மஞ்சள் பூசி,Patru Manjal Poosi - பற்றுப் பார்க்கும் மஞ்சளை(த்திருமேனி யெங்கும் பெண்கள் கையால் தனித் தனியே) பூசப் பெற்று, சிற்றில் சிதைத்து,Sitril Sithaithu - (அப் பெண்கள் இழைக்கும்) சிற்றில்களை உதைத்தழித்து (இப்படி) எங்கும்,Engum - எல்லா விடங்களிலும் தீமை செய்து,Theemai Seidhu - தீம்புகளைச் செய்து கொண்டு பாவை மாரொடு,Paavai Maarodu - அவ் விடைப் பெண்களோடே திரியாமே,Thiriyame - திரிய வொட்டாமல், கன்று,Kanru - கன்றுகளினுடைய தூளி உடை,Thooli Udai - தூள்களை யுடைத்தாய் வேடர்,Vedar - (அடித்துப் பிடுங்கும்) வேடர்களுக் கிருப்பிடமான கான் இடை,Kaan Idai - காட்டிலே கன்றின் பின்,Kanrin Pin - கன்றுகளின் பின்னே (திரியும் படியாக) என் பிள்ளையை,En Pillaiyai - என் மகனை எற்றுக்கு போக்கினேன்,Etrukku Pokkinean - ஏதுக்காக அனுப்பினேன்! |