| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2350 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – இத் திருவந்தாதிகள் எல்லா வற்றுக்குமாக இப்பாட்டை அன்யாப தேசமாக நிர்வஹித்துப் போருவது ஓன்று உண்டு – அதாகிறது-ஆழ்வாரான அவஸ்தை போய் பகவத் விஷயத்திலே அபி நிவிஷ்டை யானாள் ஒரு பிராட்டி அவஸ்தையைப் பஜித்து அவளுடைய பாசுரத்தையும் செயல்களையும் திருத் தாயார் சொல்லுகிறாள்- ஆழ்வாரான அவஸ்தை போய் ஒரு பிராட்டி அவஸ்தியைப் பஜித்து அவளுடைய தசையை தாயார் சொல்லுகிறாள் – இப்படிப் பட்ட ஸ்ரீ திருவேங்கடமுடையானுடைய முஃத்யத்தை அனுபவித்து தாமான தன்மை அழிந்து -ஒரு பிராட்டி தசையைப் பிராப்தராய் -அவளுடைய யுக்தி வ்ருத்திகளை திருத் தாயாராக அனுவதித்திக் கொண்டு பேசுகிறார் – 69 | வெற்பென்று வேங்கடம் பாடும், வியன்துழாய்க் கற்பென்று சூடும் கருங்குழல் மேல், மற்பொன்ற நீண்டதோள் மால்கிடந்த நீள்கடல்நீ ராடுவான், பூண்டநா ளெல்லாம் புகும். | வெற்பு என்று, Verppu Endru - ஏதேனும் ஒரு மலையைச் சொல்லநினைத்தாலும் வேங்கடம், Vengadam - திருமலையைப் பற்றி பாடும், Paadum - பாடுகின்றான், கற்பு என்று, Karppu Endru - குலமரியாதைக்குத் தகுந்திருப்ப தென்று வியன் துழாய், Viyan Thuzhai - விலக்ஷணமான திருத்துழாயை கரு குழல் மேல், Karuk Kuzhal Mel - (தனது) கரிய கூந்தலில் சூடும், Soodum - அணிந்து கொள்ளுகிறாள். மல், Mal - மல்லர்களை பொன்ற, Pondra - பொடிபடுத்தின நீண்ட தோள், Neenda Thol - நீண்ட திருத்தோள்களையுடைய மால், Maal - ஸர்வேச்வான் கிடந்த, Kidandha - சயனித்திருக்கப்பெற்ற நீள் கடல், Neel Kadal - பாந்த திருப்பாற்கடலிலே நீராடுவான், Neeraaduvaan - தீர்த்தமாடுவதற்காக பூண்ட நாள் எல்லாம், Poonda Naal Ellam - விடிந்த விடிவுகள் தோறும் புகும், Pugum - புறப்படுகிறான். |