| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2352 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – இப்படித் திர்யக்குகளும் ஆஸ்ரயிக்கலாம் படி ஸூலபமான ஸ்ரீ திருவேங்கடமுடையான் வர்த்திக்கிற ஸ்ரீ திருமலை வ்ருத்தாந்தாத்தை அனுசந்தித்து இனியர் ஆகிறார் – விரோதி நிரசன ஸ்வபாவனானவன் நின்று அருளின ஸ்ரீ திருமலை வ்ருத்தாந்தத்தை அனுபவித்து இனியர் ஆகிறார் – 71 | களிறு முகில்குத்தக் கையெடுத் தோடி, ஒளிறு மருப்பொசிகை யாளி, – பிளிறி விழ,கொன்று நின்றதிரும் வேங்கடமே, மேனாள் குழக்கன்று கொண்டெறிந்தான் குன்று. | களிறு, Kaliru - யானையானது கை எடுத்து ஓடி, Kai Eduthu Odi - தனது துதிக்கையை எடுத்துக் கொண்டு வேகமாயோடி முகில், Mukil - (மதயானை போலெழுந்து) மேகங்களை குத்த, Kuththa - (எதிரியானை யென்று நினைத்துக்) குத்த யாளி, Yaali - (இதைக் கண்ட) யாளியானது ஒளிறு மருப்பு, Oliru Maruppu - (அந்தயானை யினுடைய) விளங்குகின்ற கொம்பை ஓசி, Oosi - முறிக்கிற கை, Kai - கையை யுடைத்தாய்க் கொண்டு பிளிறி விழ கொன்று, Piliri Vizha Konru - (அந்தயானை) வாய்விட்டலறிக் கொண்டு விழும்படி (அதனைக்) கொன்று நின்று அதிரும், Ninru Adhirum - அங்கேயே நின்றுகொண்டு பெருமுழக்கம் செய்யப்பெற்ற வேங்கடமே, Venkatame - திருவேங்கடமே மேல் நாள், Mel Naal - முன்பொருகாலத்தில் குழ கன்று கொண்டு, Kuzha Kanru Kondu - இளங்கன்றை (எறிகுணிலாகக்) கொண்டு எறிந்தான், Erindhaan - (விளங்கனிமீது) எறிந்த பிரானுடைய குன்று, Kunru - திருமலையாம். |