| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2353 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – அயர்வறும் அமரர்கள் அதிபதியான ஸ்ரீ சர்வேஸ்வரனை கண்டு அனுபவிக்கலாவது ஸ்ரீ திருமலையிலே கிடீர் -என்கிறார் – 72 | குன்றொன்றி னாய குறமகளிர் கோல்வ ளைக்கை, சென்று விளையாடும் தீங்கழைபோய், – வென்று விளங்குமதி கோள்விடுக்கும் வேங்கடமே, மேலை இளங்குமரர் கோமான் இடம். | குன்று ஒன்றினான, Kunru Onrinaan - அத்திருமலை யொன்று தவிர வேறொரிடமும் அறியாதிருக்கிற குற மகளிர், Kura Magalir - குறத்திகள் கோல் வளை கை, Kol Vazhakai - அழகிய வளைகளணிந்த கைகளினாலே சென்று, Sendru - மேலேறி விளையாடும், Vilaiyaadum - விளையாடா நிற்கப் பெற தீம் கழை, Theem Kazhai - அழகிய மூங்கில்கள் போய், Poi - சந்திர மண்டலத்தளவும் போய் வென்று, Vendru - ராஹுவைத்தகர்த்து, விளங்கு மதிகோள் விடுக்கும், Vilangu Mathikoal Vidukkum - விளங்காநின்ற சந்திரனுடைய கிரஹணத்தை விடுவிக்கப்பெற்ற வேங்கடமே, Venkatame - திருமலையே மேலே, Mele - மேலுலகத்திலுள்ள இன குமரர் கோமான், Ina Kumarar Koomaan - நித்யயுவாக்களான நித்ய ஸூரிகளுக்குத் தலைவனான பெருமானுடைய இடம், Idam - திவ்யதேசமாம். |