| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2355 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – அவன் பக்கல் ஸ்நேஹம் உடையாரில் ஸ்ரீ யசோதைப் பிராட்டிதனைப் பரிவர் இல்லை கிடீர் என்கிறார் – நமக்கு ஸ்ரீ எம்பெருமான் பக்கலிலே வலிய மூட்ட வேண்டி இருக்கும் – இவருக்கு வெளிச் சிறப்பு கார்யகரமாகாதே கலக்கமே கார்யகரமாய்த்து-என்கிறார் – அவன் பக்கல் ஸ்நேஹம் யுடையாரில் ஸ்ரீ யசோதை பிராட்டி அத்தனை பரிவர் இல்லை கிடீர் என்கிறார் – 74 | நலமே வலிதுகொல் நஞ்சூட்டு வன்பேய், நிலமே புரண்டு போய் வீழ , – சலமேதான் வெங்கொங்கை யுண்டானை மீட்டாய்ச்சி யூட்டுவான், தன்கொங்கை வாய்வைத்தாள் சார்ந்து. | சலமே, Salame - கபடமாகவே நஞ்சு, Nanju - விஷத்தை ஊட்டு, Oottu - உண்பிக்க வந்த வன் பேய், Van Pei - கொடிய பூதனையானவன் நிலமே, Nilame - பூமியிலே புரண்டு போய் வீழ, Purandu Poi Veezh - (பிணமாய்) மறிந்துபோய் விழும்படியாகக் தான் சலமே, Thaan Salame - தானும் கபடமாகவே வெம் கொங்கை, Vem Kongai - (அவளது) வெவ்விய முலையை உண்டானை, Undaanai - அமுது செய்த கண்ணபிரானை ஆய்ச்சி, Aaychi - யசோதையானவள் மீட்டு, Meetu - (அப்பூதனைபக்கலில் நின்றும்) மீட்டு ஊட்டுவன், Oottuvan - (தனது முலைப்பாலை) உண்பிப்பதற்காக சார்ந்து, Saarndhu - அணுகிச் சென்று தன் கொங்கை, Than Kongai - தனது முலையை வாய் வைத்தான், Vaai Vaiththaan - அவனது வாயிலே உண்ணக் கொடுத்தாள், நலமே வலிதுகொல், Nalame Valithukol - இந்த ப்ரேமம் எவ்வளவு கனத்தது! |