Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2356 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2356மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – இப்படி விரோதி நிரசன சீலனான ஸ்ரீ கிருஷ்ணன் தனக்கு வாசஸ் ஸ்தானமாக விரும்பி இருக்கும் ஸ்ரீ திருமலை விருத்தாந்தத்தை அனுபவிக்கிறார் – இப்படி விரோதி நிரசன ஸ்வ பாவனான ஸ்ரீ கிருஷ்ணன் விரும்பி வர்த்திக்கிற ஸ்ரீ திருமலை விருத்தாந்தத்தை அனுபவிக்கிறார் – 75
சார்ந்தகடு தேய்ப்பத் தடாவியகோட் டுச்சிவாய்
ஊர்ந்தியங்கும் வெண்மதியி னொண்முயலை, – சேர்ந்து
சினவேங்கை பார்க்கும் திருமலையே, ஆயன்
புனவேங்கை நாறும் பொருப்பு.
தடாவிய, Thadaaviya - பரப்பையுடைத்தான
கோடு, Kodu - சகரங்களினுடைய
உச்சி வாய், Uchi Vaai - உச்சயிலே
அகடு தேய்ப்ப, Akadu Theyppa - கீழ்வயிறு உராயும்படியாக
சார்ந்து, Saarndhu - கிட்டி
ஊர்ந்து இயங்கும், Oorndhu Iyankum - மெல்ல ஸஞ்சரிக்கின்ற
வண் மதியின், Van Mathiyin - அழகிய சந்திரனிடத்துள்ள
ஒண் முயலை, On Muyalai - அழகிய முயலை,
சினம் வேங்கை, Sinam Vengai - கோபத்தை யுடைத்தான வேங்கைப் புலியானது
சேர்ந்து, Serndhu - கிட்டி
பார்க்கும், Paarkkum - (அதைப் பிடித்துக் கொள்ளவும்விட்டுப் போகவும் மாட்டாமல்) எப்போதும் பார்த்தபடியே நிற்கப் பெற்ற
ஆயன், Aayan - கண்ணபிரானுடையதாய்
புனம் வேங்கை நாறும், Punam Vengai Naarum - தன்னிலத்தில் வளர்ந்து செழிப்புற்ற வேங்கைமரங்கள் கமழப் பெற்றதான
பொருப்பு, Poruppu - மலை