| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2356 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – இப்படி விரோதி நிரசன சீலனான ஸ்ரீ கிருஷ்ணன் தனக்கு வாசஸ் ஸ்தானமாக விரும்பி இருக்கும் ஸ்ரீ திருமலை விருத்தாந்தத்தை அனுபவிக்கிறார் – இப்படி விரோதி நிரசன ஸ்வ பாவனான ஸ்ரீ கிருஷ்ணன் விரும்பி வர்த்திக்கிற ஸ்ரீ திருமலை விருத்தாந்தத்தை அனுபவிக்கிறார் – 75 | சார்ந்தகடு தேய்ப்பத் தடாவியகோட் டுச்சிவாய் ஊர்ந்தியங்கும் வெண்மதியி னொண்முயலை, – சேர்ந்து சினவேங்கை பார்க்கும் திருமலையே, ஆயன் புனவேங்கை நாறும் பொருப்பு. | தடாவிய, Thadaaviya - பரப்பையுடைத்தான கோடு, Kodu - சகரங்களினுடைய உச்சி வாய், Uchi Vaai - உச்சயிலே அகடு தேய்ப்ப, Akadu Theyppa - கீழ்வயிறு உராயும்படியாக சார்ந்து, Saarndhu - கிட்டி ஊர்ந்து இயங்கும், Oorndhu Iyankum - மெல்ல ஸஞ்சரிக்கின்ற வண் மதியின், Van Mathiyin - அழகிய சந்திரனிடத்துள்ள ஒண் முயலை, On Muyalai - அழகிய முயலை, சினம் வேங்கை, Sinam Vengai - கோபத்தை யுடைத்தான வேங்கைப் புலியானது சேர்ந்து, Serndhu - கிட்டி பார்க்கும், Paarkkum - (அதைப் பிடித்துக் கொள்ளவும்விட்டுப் போகவும் மாட்டாமல்) எப்போதும் பார்த்தபடியே நிற்கப் பெற்ற ஆயன், Aayan - கண்ணபிரானுடையதாய் புனம் வேங்கை நாறும், Punam Vengai Naarum - தன்னிலத்தில் வளர்ந்து செழிப்புற்ற வேங்கைமரங்கள் கமழப் பெற்றதான பொருப்பு, Poruppu - மலை |