| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2357 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – உகந்து அருளின நிலங்களில் இங்கே சந்நிஹிதன் ஆனபின்பு இனி -அவ்வோ விடங்களில் முகம் காட்டிப் பிழைத்துப் போம் இத்தனை -போக்கி தம் தம் உடம்புகளை நோவ வருத்தி துக்கப் பட வேண்டா கிடீர் – புருஷார்த்த லாபம் வேண்டி இருப்பார்க்கு – என்கிறார் – ஸ்ரீ சர்வேஸ்வரன் சம்சாரத்தில் புகுந்து தன்னுடம்பைப் பேணாதே நம் கார்யம் செய்யா நிற்க நீங்கள் உடம்பை ஒறுக்க வேண்டா –என்கிறார் – ஸ்ரீ சர்வேஸ்வரன் சம்சாரத்திலே புகுந்து தன்னுடம்பைப் பேணாதே நம் கார்யம் செய்யா நின்றான் நீங்கள் உடம்பை ஒறுக்க வேண்டா -என்கிறார் – உடம்பை ஒறுத்து -துஷகரமான சாதனங்களை அனுஷ்ட்டித்து துக்கப்பட வேண்டா – ஸ்ரீ வெஃகாவில் துயில் அமர்ந்த வேந்தை ஆஸ்ரயிக்க சகல துக்கங்களும் தன்னடையே விட்டுப் போம் என்கிறார் – 76 | பொருப்பிடையே நின்றும் புனல்குளித்தும், ஐந்து நெருப்பிடையே நிற்கவும்நீர் வேண்டா – விருப்புடைய வெஃகாவே சேர்ந்தானை மெய்ம்மலர்தூய்க் கைதொழுதால், அஃகாவே தீவினைகள் ஆய்ந்து. | நீர், Neer - நீங்கள் பொருப்பு இடையே, Poruppu Idaiye - மலைகளின் நடுவே நின்றும், Nindrum - நின்று கொண்டும் புனல், Punal - நீர்நிலைகளிலே குளித்தும், Kuliththum - முழுகிக்கொண்டும் ஐந்து நெருப்பு இடையே, Ainthu Neruppu Idaiye - பசுசாக்கி மத்யத்திலே நிற்கவும், Nirkavum - நின்றுகொண்டும் தவஞ்செய்ய வேண்டா, Venda - வேண்டியதில்லை, விருப்பு உடைய, Viruppu Udaya - (எல்லாராலும்) விரும்பத்தக்கதாயிருக்கின்ற வெஃகா, Vegha - திருவெஃகாவில் சேர்ந்தானை, Serndhaanai - வந்து கண் வளர்த்தருளும் பெருமானை மெய், Mei - மெய்யாக (அந்நய ப்ரயோஜநமாக) மலர் தூய்கை தொழுதால், Malar Thuykai Thozhudhal - புஷ்பங்களைப் பணிமாறி வணங்கப் பெற்றால் தீ வினைகள், Thee Vinaigal - துஷ்கருமங்களெல்லாம் ஆய்ந்து, Aayndhu - (நமக்கு இவ்விடம் வாஸயோக்யமன்று என்று) நிரூபித்தறிந்து அஃகாவே, Aghakaave - சுருங்கிப்போக மாட்டாவோ? (அகன்றோடிப் போய்விடுமென்கை) |