| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2358 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – கீழே-ஸ்ரீ சர்வேஸ்வரனை ஆஸ்ரயிக்கவே உங்கள் உடைய பாபங்கள் எல்லாம் போம் என்றார் – இதில்-அளவில்லாதார்க்கே யன்று – பேரளுவு உடையரானவர்களுக்கும் விழுக்காடு அறியாதே தங்களை முடியச் சூழ்த்துக் கொள்ளும் அன்று அவர்களுக்கும் எல்லாம் ஹித காமனாய்க் கொண்டு நோக்குவான் அவனே -என்கிறார் – அவன் அல்லது நாம் ஹிதம் அறியோம் என்றார் கீழ் – இதில் நாமே யல்ல ப்ரஹ்மாதிகளும் ஹிதம் அறியார்கள் – அவர்களுக்கும் ஹிதம் பார்ப்பான் அவனே -என்கிறார் – கீழ் ஸ்ரீ சர்வேஸ்வரனை ஆஸ்ரயிக்கவே உங்கள் பாபங்கள் எல்லாம் போம் என்றது- இதில் அளவுடையரான ப்ரஹ்மாதிகளுக்கு வழி கேடாகப் புக்கால் பரிஹரிப்பான் அவனே என்கிறது – பேர் அளவுடையரான ப்ரஹ்மாதிகளும் விளைவது அறியாமல் தங்களுக்கு ஆபத்தை விளைத்துக் கொள்ள தேடினால் ஏற்கவே அவ்வாபத்தைப் போக்கி அவர்களை ரஷிக்கக் கடவ ஸ்ரீ சர்வேஸ்வரன் திருவடிகளே நமக்கு ரேசகம் என்கிறார் – 77 | ஆய்ந்த அருமறையோன் நான்முகத்தோன் நன்குறங்கில் வாய்ந்த குழவியாய் வாளரக்கன், – ஏய்ந்த முடிப்போது மூன்றேழன் றெண்ணினான், ஆர்ந்த அடிப்போது நங்கட் கரண். | ஆய்ந்த, Aayndha - ஆராய்ந்து அதிகரிக்கப்பட்ட அரு மறையான், Aru Maraiyaan - அருமையான வேதங்களையுடையனான நான் முகத்தோன், Naan Mugaththon - சதுர்முக ப்ரஹ்மாவினுடைய நன் குறங்கில், Nan Kurangil - அழகிய மடியிலே வாய்ந்த, Vaayndha - நேர்பட்ட குழவி ஆய், Kuzhavi Aay - இனங்குழந்தையாயிருந்துகொண்டு வாள் அரக்கன், Vaal Arakkan - இராவணனுடைய போது ஏய்ந்த, Podhu Aayndha - புஷ்பமாலை பொருந்தின முடி, Mudi - தலைகளை மூன்று ஏழ் என்று எண்ணினான், Moondru Azh Enru Enninraan - பத்து என்று (தனது திருவடியாலே) எண்ணிக் காட்டினவனுடைய அடி போது, Adi Podhu - திருவடித்தாமரைகள் நங்கட்கு, Nangadku - நமக்கு ஆர்ந்த அரண், Aarntha Aran - குறையற்ற சரணம். |