Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2358 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2358மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – கீழே-ஸ்ரீ சர்வேஸ்வரனை ஆஸ்ரயிக்கவே உங்கள் உடைய பாபங்கள் எல்லாம் போம் என்றார் – இதில்-அளவில்லாதார்க்கே யன்று – பேரளுவு உடையரானவர்களுக்கும் விழுக்காடு அறியாதே தங்களை முடியச் சூழ்த்துக் கொள்ளும் அன்று அவர்களுக்கும் எல்லாம் ஹித காமனாய்க் கொண்டு நோக்குவான் அவனே -என்கிறார் – அவன் அல்லது நாம் ஹிதம் அறியோம் என்றார் கீழ் – இதில் நாமே யல்ல ப்ரஹ்மாதிகளும் ஹிதம் அறியார்கள் – அவர்களுக்கும் ஹிதம் பார்ப்பான் அவனே -என்கிறார் – கீழ் ஸ்ரீ சர்வேஸ்வரனை ஆஸ்ரயிக்கவே உங்கள் பாபங்கள் எல்லாம் போம் என்றது- இதில் அளவுடையரான ப்ரஹ்மாதிகளுக்கு வழி கேடாகப் புக்கால் பரிஹரிப்பான் அவனே என்கிறது – பேர் அளவுடையரான ப்ரஹ்மாதிகளும் விளைவது அறியாமல் தங்களுக்கு ஆபத்தை விளைத்துக் கொள்ள தேடினால் ஏற்கவே அவ்வாபத்தைப் போக்கி அவர்களை ரஷிக்கக் கடவ ஸ்ரீ சர்வேஸ்வரன் திருவடிகளே நமக்கு ரேசகம் என்கிறார் – 77
ஆய்ந்த அருமறையோன் நான்முகத்தோன்
நன்குறங்கில் வாய்ந்த குழவியாய் வாளரக்கன், – ஏய்ந்த
முடிப்போது மூன்றேழன் றெண்ணினான், ஆர்ந்த
அடிப்போது நங்கட் கரண்.
ஆய்ந்த, Aayndha - ஆராய்ந்து அதிகரிக்கப்பட்ட
அரு மறையான், Aru Maraiyaan - அருமையான வேதங்களையுடையனான
நான் முகத்தோன், Naan Mugaththon - சதுர்முக ப்ரஹ்மாவினுடைய
நன் குறங்கில், Nan Kurangil - அழகிய மடியிலே
வாய்ந்த, Vaayndha - நேர்பட்ட
குழவி ஆய், Kuzhavi Aay - இனங்குழந்தையாயிருந்துகொண்டு
வாள் அரக்கன், Vaal Arakkan - இராவணனுடைய
போது ஏய்ந்த, Podhu Aayndha - புஷ்பமாலை பொருந்தின
முடி, Mudi - தலைகளை
மூன்று ஏழ் என்று எண்ணினான், Moondru Azh Enru Enninraan - பத்து என்று (தனது திருவடியாலே) எண்ணிக் காட்டினவனுடைய
அடி போது, Adi Podhu - திருவடித்தாமரைகள்
நங்கட்கு, Nangadku - நமக்கு
ஆர்ந்த அரண், Aarntha Aran - குறையற்ற சரணம்.