| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2359 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – நெஞ்சே விரோதி நிரசன ஸ்வபாவனானவன் நமக்கு ரஷகனாம் –ஆன பின்பு அவனையே புகலாக அனுசந்திக்கப் பார் என்கிறார் – அவன் சர்வ ரஷகன் ஆகிலும் நம்முடைய ஜ்ஞான வ்ருத்த ஜன்மங்களில் கொத்தை பார்க்க வேண்டாவோ -என்ன வேண்டா -என்கிறார் – அவன் சர்வ ரக்ஷகன் ஆகிலும் -நம்முடைய ஞான வ்ருத்த ஜென்மங்கள் யுடைய கொற்றை -கொத்தை -பார்க்க வேண்டாவோ என்ன -வேண்டா என்கிறது – அவன் நமக்கு சரணமாம் இடத்தில் நம்முடைய வித்யா வ்ருத்தங்களின் பொல்லாங்கைப் பார்த்து உபேக்ஷியாதே ரக்ஷகனாம் -ஆனபின்பு அவனுடைய திரு நாமங்களைச் சொல் என்கிறார் 78 | அரணாம் நமக்கென்றும் ஆழி வலவன், முரனாள் வலம்சுழிந் த மொய்ம்பன், – சரணாமேல் ஏதுகதி ஏதுநிலை ஏதுபிறப் பென்னாதே, ஓதுகதி மாயனையே ஓர்த்து. | ஆழி, Aazhi - திருவாழியாழ்வானை வலவன், Valavan - வலத்திருக்கையிலுடையவனும் முரன், Muran - முராஸுரனுடைய நாள், Naal - ஆயுளையும் வலம், Valam - வலிமையையும் சுழித்த, Suzhiththa - போக்கின மொய்ம்பன், Moympan - மிடுக்கையுடையவனுமான பெருமான் சரண் ஆம் ஏல், Saran Aam Ael - ரக்ஷகனாக அமையும் பக்ஷத்தில் கதி ஏது நிலை எது பிறப்பு எது என்னாதே, Kathi Aethu Nilai Ethu Pirappu Ethu Ennaadhe - (நம்முடைய) ஞானமென்ன!, ஆசார மென்ன! ஜன்ம மென்ன! என்று (இவற்றின் தாழ்வுகளைப் பார்த்து உபேக்ஷியாமல் நமக்கு என்றும் அரண் ஆம், Namakku Endrum Aran Aam - நமக்கு எல்லாக் காலத்திலும் ரக்ஷகனாகவே யிருப்பன், (ஓநெஞ்சமே) ஓர்த்து, Oorththu - இதை நன்றாக அறிந்து கொண்டு மாயனையே, Maayanaiye - ஆச்சரியமான குண சேஷ்டிதங்களை யுடையனான அப்பெருமானையே கதி, Kathi - உபாயமாக ஓது, Othu - அநுஸந்தித்துக் கொண்டிரு. |