| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 236 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-இரண்டாம் திருமொழி - அஞ்சனவண்ணனை) (யசோதப்பிராட்டி கண்ணனைக் கன்றின்பின் போக்கினதை எண்ணி அநுதபித்தல்) (கலிநிலைத்துறை) 3 | நன் மணி மேகலை நங்கை மாரொடு நாள் தொறும் பொன் மணி மேனி புழுதி யாடித் திரியாமே கன் மணி நின்றதிர் கானதரிடைக் கன்றின் பின் என் மணி வண்ணனைப் போக்கினேன் எல்லே பாவமே–3-2-3 | என்,En - என் மகனான மணி வண்ணனை,Mani Vannanai - நீல மணி போன்ற வடிவை யுடைய கண்ணனை, நல்,Nal - லோகோத்தரமான மணி,Mani - நவ மணிகள் பதித்த மேகலை,Megalai - மேகலையை (அணிந்துள்ள) நங்கைமாரொடு,Nangaimaarodhu - யுவதிகளோடு கூட நாள் தொறும்,Naal Thorum - தினந்தோறும் பொன் மணி மேனி,Pon Mani Meni - அழகிய நீல மணி போன்ற திருமேனியானது புழுதி ஆடி,Puzhuthi Aadi - புழுதி படைக்கப் பெற்று(விளையாடி) திரியாமே,Thiriyame - திரிய வொண்ணாதபடி கான்,Kaan - காட்டிலே கல்,Kal - (இவன் கன்றுகளை அழைக்கிற த்வநியாலும், அவை கூவுகிற த்வநியாலும்) மலையிலே மணி நின்று அதிர்,Mani Nindru Athir - மணியினோசை போல பிரதி த்வநி யெழும்பப் பெற்றுள்ள (பயங்கரமான) அதர் இடை,Athar Idai - வழியிலே கன்றின் பின்,Kanrin Pin - (வருந்தும்படியாக) கன்றுகளின் பின்னே போக்கினேன்,Pokkinean - போகவிட்டேனே! எல்லே பாவமே,Elle Paavame - மஹாபாபம்! மஹாபாபம். |