Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2360 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2360மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – அநாதி காலம் பண்ணின பாபத்தைப் போக்கும் போது அநந்த காலம் வேண்டாவோ என்னில் – அவனை அனுசந்தித்து – சப்தாதி விஷயங்களிலே அநாதரம் பிறக்கச் சடக்கென்னப் போக்கலாம் -என்கிறார் – நாட்டார் நான் சொல்லப் போகிற படிகளைச் செய்தார்கள் ஆகில் ஜென்மங்களைப் போக்கலாம் கிடீர் என்கிறார் – அநாதி காலம் பண்ணின பாபத்தைப் போக்கும் போது அநந்த காலம் வேண்டாவோ -என்னில் அவனை அனுசந்தித்து சப்தாதிகளிலே அநாதரம் பிறக்கச் சடக்கெனப் போக்கலாம் என்கிறது – அநாதி காலம் பண்ணின பாபத்தைப் போக்கும் போது அநந்த காலம் வேண்டாவோ -என்னில் அவனை அனுசந்தித்து சப்தாதிகளிலே அநாதரம் பிறக்கச் சடக்கெனப் போக்கலாம் என்கிறார் – 79
ஓர்த்த மனத்தராய் ஐந்தடக்கி யாராய்ந்து,
பேர்த்தால் பிறப்பேழும் பேர்க்கலாம், – கார்த்த
விரையார் நறுந்துழாய் வீங்கோத மேனி,
நிரையார மார்வனையே நின்று.
கார்த்த, Kaartha - பசுமையான நிறமுள்ளதாய்
விரை ஆர், Virai Ar - பரிமளம் நிரம்பியதான
நறு துழாய், Naru Thuzhai - செவ்வித்திருத்துழாய் மாலையையுடையவனும்
வீங்கு ஓதம் மேனி, Veengu Otham Meeni - பொங்குங்கடல் போன்ற திருமேனியை யுடையவனும்
நிரை ஆரம் மார்வனையே, Nirai Aaram Maarvanaiye - ஒழுங்கான ஹாரங்களணிந்த திருமார்பை யுடையவனுமான பெருமானையே
நின்று, Ninru - நெஞ்சு நிலைத்து நின்று
ஓர்த்த மனத்தர் ஆய், Oorththa Manaththar Aay - அநுஸந்திக்கின்ற மனமுடையாய்
ஐந்து அடக்கி, Aindhu Adakki - பஞ்சேந்திரியங்களையும் வென்று
ஆராய்ந்து, Aaraindhu - ஸம்ஸாரத்தின் கெடுதல்களை ஆராய்ந்து
பேர்த்தால், Paerththal - ஸம்ஸாரத்தில் நின்றும் நெஞ்சைத் திருப்பிக்கொண்டால்
பிறப்பு ஏழும், Pirappu Ezhum - ஒன்றின்பின் ஒன்றாக நேரக்கூடிய ஜன்ம பரம்பரைகளை
போக்கலாம், Pokkalam - தொலைத்துவிடலாம்.