திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2361 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2361மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – இவ்விஷயத்தில் தமக்கு முன்னே தம் திரு உள்ளமானது பிரவணமான படியை அருளிச் செய்கிறார் – உபதேச நிரபேஷமாக என்னுடைய நெஞ்சானது அவனுடைய விரோதி நிரசன ஸ்வ பாவத்தை அனுசந்தித்து இந்த்ரிய ஜெயம் பண்ணி சம்சாரத்தைப் போக்கி அனுசந்திக்க முயலா நின்றது – என்கிறார் – நம்மால் இந்திரிய ஜெயம் பண்ணி அவனை அனுசந்தித்து சம்சார சம்பந்தம் அறுக்கப் போகாது – அவன் பிரதிபந்தகங்களைப் போக்க அவனை அனுசந்திக்க ஆசைப்படா நின்றது நெஞ்சு என்கிறார் – பிரதிகூல நிரசன ஸ்வபாவனானவனைப் பெற வேணும் என்று தமக்கு முன்னே தம் திரு உள்ளம் அவ்விஷயத்தில் பிரவணமான படியை அருளிச் செய்கிறார் – 80
நின்றெதி ராய நிரைமணித்தேர் வாணன்தோள், ஒன்றியவீ ரைஞ்ஞா றுடன்துணிய – வென்றிலங்கும் ஆர்படுவான் நேமி அரவணையான் சேவடிக்கே, நேர்படுவான் தான்முயலும் நெஞ்சு.
பதவுரை Show / Hide
நின்று, Ninru - (கூசாமல்) முன்னே வந்து நின்று
எதிர் ஆய, Edhir Aaya - எதிரியாய்ப் போர் செய்ய வந்தவனும்
நிரைமணி தேர், Niraimani Ther - ஒழுங்காக அழுத்தின மணிகளையுடைய தேரின்மேலேறி யுள்ளவனுமான
வாணன், Vaanan - பாணாஸுரனுடைய
ஒன்றிய ஈர் ஐந்நூறு தோள், Onraya Eer Ainnuru Thol - அடியுரமுள்ள ஆயிரந்தோள்களும்
துணிய, Thuniya - அறுப்புண்டு விழும்படியாகக் காரியஞ் செய்து
வென்று, Vendru - வெற்றி பெற்று
இலங்கும், Ilankum - விளங்குகின்ற
ஆர்படு, Aarbadhu - கூர்மையையுடைய
வான், Vaan - திவ்யமான
நேமி, Nemi - திருவாழியாழ்வானை யுடையவனாய்
அரவு அணையான், Aravu Anaiyaan - சேஷசாயியான எம்பெருமானுடைய
சே அடிக்கே, Sae Adikke - திருவடிகளிலே
நெஞ்சு தான், Nenjhu Thaan - (எனது) நெஞ்சு தானே
முயலும், Muyalum - உத்ஸாஹப் படுகின்றது.