| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2361 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – இவ்விஷயத்தில் தமக்கு முன்னே தம் திரு உள்ளமானது பிரவணமான படியை அருளிச் செய்கிறார் – உபதேச நிரபேஷமாக என்னுடைய நெஞ்சானது அவனுடைய விரோதி நிரசன ஸ்வ பாவத்தை அனுசந்தித்து இந்த்ரிய ஜெயம் பண்ணி சம்சாரத்தைப் போக்கி அனுசந்திக்க முயலா நின்றது – என்கிறார் – நம்மால் இந்திரிய ஜெயம் பண்ணி அவனை அனுசந்தித்து சம்சார சம்பந்தம் அறுக்கப் போகாது – அவன் பிரதிபந்தகங்களைப் போக்க அவனை அனுசந்திக்க ஆசைப்படா நின்றது நெஞ்சு என்கிறார் – பிரதிகூல நிரசன ஸ்வபாவனானவனைப் பெற வேணும் என்று தமக்கு முன்னே தம் திரு உள்ளம் அவ்விஷயத்தில் பிரவணமான படியை அருளிச் செய்கிறார் – 80 | நின்றெதி ராய நிரைமணித்தேர் வாணன்தோள், ஒன்றியவீ ரைஞ்ஞா றுடன்துணிய – வென்றிலங்கும் ஆர்படுவான் நேமி அரவணையான் சேவடிக்கே, நேர்படுவான் தான்முயலும் நெஞ்சு. | நின்று, Ninru - (கூசாமல்) முன்னே வந்து நின்று எதிர் ஆய, Edhir Aaya - எதிரியாய்ப் போர் செய்ய வந்தவனும் நிரைமணி தேர், Niraimani Ther - ஒழுங்காக அழுத்தின மணிகளையுடைய தேரின்மேலேறி யுள்ளவனுமான வாணன், Vaanan - பாணாஸுரனுடைய ஒன்றிய ஈர் ஐந்நூறு தோள், Onraya Eer Ainnuru Thol - அடியுரமுள்ள ஆயிரந்தோள்களும் துணிய, Thuniya - அறுப்புண்டு விழும்படியாகக் காரியஞ் செய்து வென்று, Vendru - வெற்றி பெற்று இலங்கும், Ilankum - விளங்குகின்ற ஆர்படு, Aarbadhu - கூர்மையையுடைய வான், Vaan - திவ்யமான நேமி, Nemi - திருவாழியாழ்வானை யுடையவனாய் அரவு அணையான், Aravu Anaiyaan - சேஷசாயியான எம்பெருமானுடைய சே அடிக்கே, Sae Adikke - திருவடிகளிலே நெஞ்சு தான், Nenjhu Thaan - (எனது) நெஞ்சு தானே முயலும், Muyalum - உத்ஸாஹப் படுகின்றது. |