Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2362 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2362மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – கீழே-சம்சாரிகளுக்கு இல்லாதது தமக்கு உண்டானவாறே நெஞ்சு ஸ்ரீ பகவத் விஷயத்திலே ப்ரவணமாய்த்து என்று கொண்டாடினார் – விஷயத்தைப் பார்த்தவாறே-முதலடி இட்டிலராய் இருந்தார் – அவன் துர்ஜ்ஞேயன் ஆகிலும் அவனை அனுசந்தி என்று திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்து இவனை இம் மமனஸ் அனுசந்தியா இருக்கைக்கு ஹேது என்னோ -என்கிறார் இத்தால்-தம் நெஞ்சு முயலுகிற முயற்சி போராதது என்னும்படி தமக்கு அவ் விஷயத்தில் உண்டான ப்ராவண்யம் இருந்தபடி சொல்லுகிறார் – அவன் பெருமை பார்த்த போது அறிவொன்றும் இல்லையாத் தோன்றும் புறம்பே பார்த்த போது குவாலாய் இருக்கும் – கீழ் சம்சாரிகளுக்கு இல்லாதது தமக்கு உண்டானவாறே நெஞ்சு ஸ்ரீ பகவத் விஷயத்திலே மண்டிற்று என்று கொண்டாடினார் -விஷயத்தைப் பார்த்த வாறே அடியிட்டிலராய் இருந்தார் என்கிறது – 81
நெஞ்சால் நினைப்பரிய னேலும் நிலைபெற்றேன்
நெஞ்சமே பேசாய் நினைக்குங்கால், நெஞ்சத்துப்
பேராது நிற்கும் பெருமானை என்கொலோ,
ஓராது நிற்ப துணர்வு.
என் நெஞ்சமே, En Nenjhame - எனது மனமே!,
நெஞ்சால் நினைப்பு அரியன் எலும், Nenjhal Ninaippu Ariyan Elum - (எம்பெருமான்) நெஞ்சாலும் நினைக்க முடியாத பெருமை வாய்ந்தவனே யாயினும் (அவனுடைய பெருமையை நினையாமல் ஸௌலப்யத்தையே நினைத்து)
நிலைப்பெற்று, Nilaiyeptru - காலூன்றி நின்று
பேசாய், Pesai - அவனைப் பேசப்பார்
நினைக்குங் கால், Ninaikkung Kaal - நாம் ஒருகால் நினைத்தாலும்
நெஞ்சத்து, Nenchatthu - நெஞ்சுதன்னிலே
பேராது நிற்கும், Peraadhu Nirkum - விட்டுநீங்காமல் நிலைத்து நிற்கின்ற
பெருமானை, Perumaanai - எம்பெருமானை
உணர்வு, Unarvu - நமது நெஞ்சானது
ஓராது நிற்பது என்கொலோ, Oraadhu Nirpadhu Enkolo - அநுஸந்தியாமல் வானாவிருப்பது ஏனோ?