| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2363 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – இது தன்னை நாம் இன்னாதாகிறது என் – அவன் தான் சிலரால் அறிய ஒண்ணாத படியாய் இருப்பான் ஒருவனுமாய் நிரதிசய போக்யனுமான பின்பு இனி யவனை நாம் கிட்டிக் கண்டோமாய்த் தலை கட்ட விரகு உண்டோ என்கிறார் – இம் மனசை இன்னாதாகிறது என் -ஒருவருக்கும் ஒருவகையும் அறிய ஒண்ணாதபடி இருப்பானாய் நிரதிசய போக்யனுமாய் இருந்த பின்பு இனி யவனை நாம் கிட்டிக் கொண்டோமாயத் தலைக் கட்ட விரகு உண்டோ -என்கிறார் – 82 | உணரில் உணர்வரியன் உள்ளம் புகுந்து புணரிலும் காண்பரிய னுண்மை, – இணரணையக் கொங்கணைந்து வண்டறையும் தண்டுழாய்க் கோமானை, எங்கணைந்து காண்டும் இனி. | உணரில், Unaril - (அப்பெருமானை நாமாக) அறியப்பார்த்தாலும் உணர்வு அரியன், Unarvu Ariyan - (அவன்) அறியக் கூடாதவன் (அவன்தானே) உள்ளம் புகுந்து புணரிலும், Ullam Pugundhu Punarilum - நெஞ்சிலே வந்து புகுந்து சேர்ந்தாலும் உண்மை காண்பு அரியன், Unmai Kaanbu Ariyan - உள்ளபடி அறியக் கூடாதவன் இனி, Ini - இப்படியான பின்பு இணர் அணைய, Inar Anaiya - பூங்கொத்துகள் தாழும்படியாக கொங்கு, Kongu - தேனிலே வண்டு, Vandu - வண்டுகள் அணைந்து, Anaindhu - வந்துகிட்டி (மதுவைப்பருகி) அறையும், Araiym - ரீங்காரம் செய்யப்பெற்ற தன், Than - குளிர்ந்த துழாய், Thuzhaai - திருத்துழாய் மாலையை அணிந்துள்ளவனான கோமானை, Komanai - அப்பெருமானை எங்கு, Engu - எவ்விடத்தில் அணைந்து, Anaindhu - கிட்டி காண்டும், Kaandum - காணக்கடவோம். |