| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2365 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – வேதைக சமதி கம்யனாய் உள்ளவனை ஒருவரால் கண்டதாய்த் தலைக் கட்ட ஒண்ணாது – கண்டாராகச் சொல்லுகிறவர்கள் அடைய கவிகளைக் கொண்டாடினார்கள் அத்தனை அல்லது ஒருவரும் கண்டார் இல்லை என்கிறார் – வேதைக சமதி கம்யனானவனை ஒருவரால் காண முடியாது -கண்டாராகச் சொல்லுகிறவர்களும் கவிகளைக் கொண்டாடினார் அத்தனை அல்லது ஒருவரும் கண்டார் இல்லை -என்கிறார் – 84 | உளனாய நான்மறையின் உட்பொருளை, உள்ளத் துளனாகத் தேர்ந்துணர்வ ரேலும், – உளனாய வண்டா மரைநெடுங்கண் மாயவனை யாவரே, கண்டா ருகப்பர் கவி. | நால் மறையின், Naal Maraiyin - நான்கு வேதங்களினுடைய உள் பொருள், Ul Porul - உள்ளுறை பொருளாக உளனாயவனை, Ulanayavanai - இருக்கின்ற எம்பெருமானை தேர்ந்து, Therndhu - (ஜ்ஞாநயோகத்தாலே) ஆராய்ந்து உள்ளத்து உளன் ஆக, Ullathu Ulan Aaga - நெஞ்சிலே பொருந்தியிருப்பவனாக உணர்வர் ஏலும், Unarvar Aelum - (சில ஞானிகள்) அறிய வல்லாரென்றாலும், வண் தாமரை, Van Thamarai - அழகிய தாமரைப் பூப்போன்ற நெடு கண், Nedu Kan - நீண்ட தீருக்கண் களையுடைய மாயவன், Maayavan - ஆச்சர்யபூதனாக உளனாபவனை, Ulanapavanai - இருக்கின்ற அப்பெருமானை கண்டார் யாவரே, Kandaar Yaavare - கண்டு அநுபவிக்கப்பெற்றார் யாவர்? (ஒருவருமில்லை) கவி உகப்பர், Kavi Ugappar - தோத்திரக் கவிகளை உகந்து வாயாற் சொல்லிக்கொண்டு போது போக்குவர்களத்தனை. |