Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2366 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2366மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – ஒருத்தரால் அறியப் போகாதாகில்-வாழ்த்துவார் பலராக –திருவாய் மொழி -3-1-7-என்னும்படியே பூமியில் உள்ளார் எல்லாரும் கூடினால் அறியப் போமோ-என்னில் எல்லாரும் அடையத் திரண்டு தந்தாமுடைய கரண சக்திகளைக் கொண்டு அவனை ஸ்தோத்ரம் பண்ண வென்று புக்கால் பின்னையும் அவர்கள் நின்ற நிலைக்கு இவ்வருகாய் அன்றோ அவ்விஷயம் இருப்பது என்கிறார் – ஒருத்தரால் அறியப் போகாதாகில் -வாழ்த்துவர் பலராக என்னும் படியே பூமியில் உள்ளார் எல்லாரும் கூடினாலும் அறியவும் ஏத்தவும் போமோ -என்னில் ஒண்ணாது என்கிறார் – நால்வர் இருவரால் அறியப் போகாது என்கிற அளவன்றிக்கே பூமியில் உள்ளார் அடங்கலும் பெரு முனையாகக் கூட்டித் தம் தாமுடைய சர்வ கரணங்களையும் கொண்டு ஸ்தோத்ரம் பண்ணப் புக்காலும் அவர்களுக்கும் எட்ட ஒண்ணாத படி அவ்வருகு பட்டு அன்றோ அவ்விஷயம் இருப்பது என்கிறார் – 85
கவியினார் கைபுனைந்து கண்ணார் கழல்போய்,
செவியினார் கேள்வியராய்ச் சேர்ந்தார், – புவியினார்
போற்றி யுரைக்கப் பொலியுமே, – பின்னைக்காய்
ஏற்றுயிரை அட்டான் எழில்.
கவியினார், Kaviyinaar - தோத்திரங்கவிகளைச் சொல்லு பவராய்க்கொண்டு
கை புனைந்து, Kai Punaindhu - அஜ்ஞலிபண்ணி
கண், Kan - தமது கண்கள்
ஆர் கழல் போய், Aar Kazhal Poi - (அவனது) விலக்ஷணமான திருவடிகளிலே சென்று சோப்பெற்று
செவியின் ஆர் கேள்வியர் ஆய், Seviyin Aar Kelviyir Aay - காது நிறைந்த கேள்விகளையுடையராய்க் கொண்டு
சேர்ந்தார், Serndhaar - வந்து பணிந்தவர்களான
புவியினார், Puviyinaar - பூமியிலுள்ளா ரெல்லாரும்
போற்றி உரைக்க, Pothri Uraikka - (ஒன்று கூடிப்) போற்றி யுரைத்தாலும்,
பின்னைக்காய் எது உயிரை அட்டான் எழில் பொலியுமே, Pinnaikkai Edhu Uyirai Attaan Ezhil Poliyume - நப்பின்னைப் பிராட்டிக்காக ரிஷபங்களினுயிரை மாய்ந்த பெருமானுடைய அழகு சிறப்புறச் சொல்லப்பட்ட தாகுமோ?