| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2367 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – ஸ்வரூப ரூப குணங்களைப் பரிச்சேதிக்கப் போகாது –உபமானத்தில் சிறிது சொல்லலாம் இத்தனை என்கிறது – ஸ்ரீ எம்பெருமான் உடைய அழகை அனுபவிக்க முடியாது என்னிலும் விட ஒண்ணாத படி ஸ்ப்ருஹநீயமாய் இருக்கும் அது காண வேணும் என்று இருப்பாருக்கு மேகங்களே அவன் வடிவைக் காட்டும் -என்கிறார் – சம்சாரத்தில் இருப்புக்கு ஒரு பிரயோஜனம் உண்டு – அதாகிறது அவன் வடிவுக்கு போலியான பதார்த்தம் கண்டு அனுபவிக்கலாம் என்கிறார் – ஸ்வரூப ரூபங்கள் பரிச்சேதிக்கப் போகாது -உபமானத்தாலே சிறிது சொல்லலாம் இத்தனை என்கிறது – அவனுடைய அழகை ஒருவராலும் அளவிட்டு காண ஒண்ணாதாகிலும் அத்தை விட்டு ஆறி இருக்க மாட்டாதே கண்டு அனுபவிக்க வேணும் என்று ஆசைப்படுமவர்களுக்கு மேகங்கள் தானே அவன் வடிவைக் காட்டும் என்கிறார் 86 | எழில்கொண்டு மின்னுக் கொடியெடுத்து, வேகத் தொழில்கொண்டு தான்முழங்கித் தோன்றும், – எழில் கொண்ட நீர்மேக மன்ன நெடுமால் நிறம்போல, கார்வானம் காட்டும் கலந்து. | எழில் கொண்ட, Ezil Konda - அழகையுடைத்தாய் நீர், Neer - நீர்நறைந்ததான மேகம் தான், Megam Thaan - மேகமானது எழில் கொண்ட மின் கொடி எடுத்து, Ezil Konda Min Kodi Eduthu - அழகிய மின்னற்கொடி படாப்பெற்று வேகம் தொழில் கொண்டு, Vegam Thozhil Kondu - வேகமாகத் திரிதலாகிற வியாபாரத்தைச் செய்யப்பெற்ற முழங்கி தோன்றும், Muzhangi Thondrum - கர்ஜித்துக்கொண்டு விளங்குதற்கிடமான கார் வானம், Kaar Vaanam - கார் காலத்து ஆகாசமானது அன்ன நெடுமால் நிறம்போல கலந்து காட்டும், Anna Nedumaal Nirampola Kalandhu Kaattum - அப்படிப்பட்ட எம்பெருமானுடைய திருநிறத்தை அநுகரித்திராநின்றது. |