| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2369 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – இப்படி இருக்கிற சர்வேஸ்வரனை விட்டு இதர விஷயங்களில் உண்டான உள்மானம் புறமானத்தை ஆராய்ந்து சம்சயியாதே சர்வ சமாஸ்ரயநீயனான ஸ்ரீ சர்வேஸ்வரன் திருவடிகளை ஆஸ்ரயிங்கோள் – உங்களுடைய சமஸ்த துக்கங்களும் போம் என்கிறார் – உங்களுடைய பிரதிபந்தகங்கள் வேறு ஒரு வியக்திக்கு ஆகாத படி போம் என்கிறார் – இதர விஷயங்களில் உள்மனம் புறமானங்களை ஆராய்ந்து சம்சயியாதே சர்வ ஸமாச்ரயணீயனான ஸ்ரீ சர்வேஸ்வரன் திருவடிகளை ஆஸ்ரயிங்கோள் -உங்களுடைய ஸமஸ்த துக்கங்களும் போம் என்கிறார் – 88 | அதுநன் றிதுதீதென் றையப் படாதே, மதுநின்ற தண்டுழாய் மார்வன், – பொதுநின்ற பொன்னங் கழலே தொழுமின், முழுவினைகள் முன்னங் கழலும் முடிந்து. | அது நன்று இது தீது என்று ஐயம் படாதே, Adhu Nandru Ithu Theethu Endru Aiyam Padaadhe - ‘அது நல்லதோ? இது கெட்டதோ?‘ என்று ஸந்தேஹப்பட்டுக் கொண்டிராமல் மது நின்ற தன் துழாய் மார்வன், Madhu Nindra Than Thuzhai Maarvan - தேன்நிறைந்த தண்டுழாய் மாலையைத் திருமார்பிலணிந்த பெருமானுடைய பொது நின்ற, Podhu Nindra - ஸர்வஜந ஸாதாரணமான பொன் அம்கழலே, Pon Amkalale - விரும்பத்தக்க அழகிய திருவடிகளையே தொழுமின், Thozhumin - தொழுங்கோள், (அப்படி தொழுதால்) முன்னம், Munnam - முந்துறவே முழு வினைகள், Muzhu Vinaigal - ஸம்ஸ்த பாபங்களும் முடிந்து, Mudinthu - உருமாய்ந்து கழலும், Kazhalum - விட்டு நீங்கும். |