| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 237 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-இரண்டாம் திருமொழி - அஞ்சனவண்ணனை) (யசோதப்பிராட்டி கண்ணனைக் கன்றின்பின் போக்கினதை எண்ணி அநுதபித்தல்) (கலிநிலைத்துறை) 4 | வண்ணக் கருங் குழல் மாதர் வந்து அலர் தூற்றிட பண்ணிப் பல செய்து இப் பாடி யெங்கும் திரியாமே கண்ணுக் கினியானைக் கானதரிடைக் கன்றின் பின் எண்ணற் கரியானைப் போக்கினேன் எல்லே பாவமே–3-2-4 | கண்ணுக்கு இனியானை,Kannukku Iniyanai - கண்களுக்கு மிகவும் தர்சநீயனாய் எண்ணற்கு அரியானை,Ennarkku Ariyanai - (இத் தன்மையன் என்று) நினைக்க முடியாதவனாயுள்ள கண்ணபிரானை இப் பாடி எங்கும்,Ep Paadi Engum - இத் திருவாய்ப்பாடி முழுவதும் பல செய்து,Pala Seidhu - பல (தீமைகளைச்) செய்து (அத் தீமைகளினால்) வண்ணம் கரு குழல்,Vannam Karu Kuzhal - அழகிய கறுத்த கூந்தலை யுடையரான மாதர்,Maadhar - பெண் பிள்ளைகள் வந்து,Vandhu - (தாயாகிய என்னிடம் ஓடி) வந்து அலர் தூற்றிடப் பண்ணி,Alar Thoottidap Panni - பழி தூற்றும்படியாகப் பண்ணிக் கொண்டு திரியாமே,Thiriyame - திரிய வொட்டாமல் கான் அதர் இடை,Kaan Athar Idai - காட்டு வழியிலே கன்றின் பின்,Kanrin Pin - கன்றுகளின் பின்னே (திரியும்படி) போக்கினேன்,Pokkinean - அனுப்பினேனே! எல்லே பாவமே!,Elle Paavame - மஹாபாபம்! மஹாபாபம். |